tamilnadu

img

திருப்பத்தூர் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஆம்பூர், டிச.9 -  திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றி யம்,குனிச்சி அரசு சமுதாய சுகாதார மருத்துவ மனையில் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் நம்பிக்கை மையம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் எய்ட்ஸ் நோயி னால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு எய்ட்ஸ் தடுப்பு மையத்தின்   மாவட்ட மேற்பார்வையாளர் சுப்பிரமணி  தலைமை தாங்கினார். குனிச்சி அரசு மருத்து வர் முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பா ளர்களாக மண்டல மேற்பார்வையாளர் முனியப்பன், திட்ட மேலாளர் வேலு, அக்னி சுடர் அறக்கட்டளை செயலாளரும் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் தமிழ்செல்வன், இயற்கை மீட்பு அறக்கட்டளை நிர்வாகி  நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு  எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆலோசனை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர் விழா ஏற்பாடுகளை நம்பிக்கை மையத்தின்  கந்திலி வட்டார களப்பணியா ளர் காமராஜ் செய்திருந்தார்.  சமூக ஆர்வ லர்கள் ராதாகிருஷ்ணன், மகான், மகேந்தி ரன், வடிவேல், சுரேஷ், திருமாவிமல் உட்பட  பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நம்பிக்கை மையத்தின் ஆலோசகர் சுமதி நன்றி கூறினார்.

;