tamilnadu

img

தொடர் மழையால் வாரச் சந்தை வியாபாரம் பாதிப்பு

அவிநாசி, டிச. 2- சேவூர் பகுதியில்  தொடர் மழையால் வாரச் சந்தை வியாபாரம் பாதிக்கப்பட் டுள்ளது. அவிநாசி ஒன்றியம், சேவூரில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று சந்தை கூடுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் காய்கறி, மளிகை பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் பொறி, கடலை உள்பட திண்பண்டங்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், அவி நாசி பகுதிகளிலிருந்தும் 3000 க்கும் மேற்பட்டவர்கள்  வாரச் சந்தைக்கு வரு வது வழக்கம்.  இந்நிலையில் திங்களன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. மாலை யிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. விற்பனை அதிக மாக இருக்கும் மாலை நேரத்தில் தொடர் மழையால்  எதிர்பாத்த அளவிற்கு பொது மக்கள் வரவில்லை. இதனால் வியாபாரி கள் பாதிப்பு அடைந்தனர். பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.