tamilnadu

img

சாதியத்தை வேரறுப்போம், சமத்துவத்தை முன்னேடுப்போம்

தருமபுரி, ஜூலை 25- சாதியத்தை வேரறுப் போம். சமத்துவத்தை முன்னேடுப்போம் என்ற முழக்கத்தோடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை முன்னிட்டு தருமபுரி அருகே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 17 ஆம்  தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இம்மாநில மாநாட் டையொட்டி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாதே மங்கலத்தில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி துவக்கி வைத்தார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட  செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணைச்செயலாளர் பி. ஜெயராமன், ஒன்றிய தலைவர் சிவகுரு, ஒன்றிய செயலாளர் கே.ரமேஷ், தருமபுரி ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, இப்பிரச்சாரத்தில் பேசிய தலைவர்கள், சாதியம் அனைத்து பகுதி மக்களிடையே வேற்றுமைகளை  உரு வாக்கி,  ஒட்டுமொத்த வாழ்வாதார பிரச் சனைகளை பின்னுக்குத்தள்ளி, ஒரு சமூகத்தை மற்ற சமூகத்துடன் மோதவி டுகிறது. இன்னும் எத்தனையே இழிவு களை செய்யும் இந்த நாசகார சாதியத்தை வேரறுப்போம். சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு கொள்கைகளை வலிமையாக முன்னேடுக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட் டில் திரளாக பங்கேற்போம் என வலி யுறுத்தி மக்களிடையே பிரச்சாரம் மேற் கொண்டனர்.