மேட்டுப்பாளையம், மார்ச். 4- மேட்டுப்பாளையம், சிறுமு கையை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்கு அச்சுறுத்தல் அதிக மானதால் வாழை விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டு வருவதாக வும், மாற்று விவசாயத்திற்கு மாறி யும் இழப்பையே சந்தித்து வருவ தாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம், சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயமே முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இந்நிலை யில், அடர்ந்த வனப்பகுதியில் நில வும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானை மற்றும் பிற வனவிலங் குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்து வரு வது இப்பகுதியில் தொடர் நிகழ் வாகி விட்டது. இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இயலாமல் வாழை விவ சாயிகள் பலரும் வேறு பயிர்களை விவசாயம் செய்ய தொடங்கியுள்ள னர். இதில் சிறுமுகை பகுதியில் உள்ள வாழை விவசாயிகள் வாழைக்கு மாற்றாக சத்தான கீரை வகைகளை விவசாயம் செய்யத் துவங்கியுள்ளனர். பருப்பு கீரை, சுக்குட்டி கீரை, அகத்திக்கீரை, சிறு கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை, பண்ணைக்கீரை போன்ற கீரை வகைகளை பயிர் செய்து பராமரித்து வருகின்றனர். 40 நாட்களில் மகசூல் தரும் இந்த கீரை வகைகளை வாரத்தில் 2 முறை சாகுபடி செய்து அன்னூர், புளியம் பட்டி ஆகிய வாரச்சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் வாரச் சந்தைகளில் கீரை வகைகளுக்கு கட்டு ஒன்றுக்கு ரூ.6 அல்லது ரூ.7 வரை தான் விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. கீரை விவசா யத்திற்கு செய்த கொள்முதலைக் கூட எடுக்க முடியாமல் நஷ்டத் திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மாற்று விவசாயத்திற்கு மாறியும் இழப் பையே சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் கீரை விவ சாயிகள், கீரை ஒரு கட்டுக்கு ரூ.10 வரை விலை கிடைத்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றும், கீரை வகைகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.