tamilnadu

img

அவிநாசி அருகே மண் கடத்திய லாரியை விரட்டிப் பிடித்த வட்டாட்சியர்

அவிநாசி, நவ. 29- அவிநாசி அருகே மங்கலம் சாலையில் வெள்ளி யன்று மண்ணை அள்ளிச் சென்ற லாரியை வட் டாட்சியர் விரட்டிப் பிடித்தார்.  அவிநாசி வழியாக திருப்பூர் செல்லும் 4 வது குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவிநாசி மங்க லம் சாலையில் குடிநீர் குழாய்கள் புதைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழாய்களை பதிப்பதற்காக தோண்டிய மண்ணை உரிய அனுமதியின்றி லாரியில் கடத்திச் செல்வ தாக வட்டாட்சியருக்கு புகார் வந்தது. இதையடுத்து, மங்கலம் சாலையில்  மண்ணை அள்ளிச் சென்ற லாரியை அவிநாசி வட்டாட்சியர் விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது லாரி ஓட்டுநரும், உடனிருந்த நெடுஞ் சாலைத்துறை அதிகாரி சக்திவேலும் முரணா கப் பேசி உள்ளனர். இருப்பினும், நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித அனுமதியும் வருவாய்த் துறையிடம் பெறவில்லை. இந்நிலையில், நெடுஞ் சாலைத் துறையினர் உரிய அனுமதி பெற்று மண்ணை எடுத்துச் செல்லலாம் என தெரிவித்தார்.