ஏற்காடு, ஆக.25- ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் திடீ ரென்று அருவிகள் தோன்றி உள்ளன. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரு கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் நிரம்புவதால் விவ சாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஏழை களின் உதகை என்றழைக்கப்படும் ஏற் காட்டிலும் தொடர் மழை பெய்து வரு கிறது. குறிப்பாக கடந்த 2 வாரங்களாக இரவு நேரங்களில் பலத்த மழையும், சாரல் மழையும் மாறி, மாறி பெய்து வருகிறது. மேலும் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் மேக மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஏற்காட்டில் உள்ள கிராமப் புறங் களிலும் மழை பெய்து வருவதால், தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஏற்காடு ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால், ஏரி நிரம்பியது. இந்நிலையில் வெள்ளியன்று பெய்த பலத்த மழை காரணமாக சனியன்று சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 10க்கும் மேற் பட்ட இடங்களில் திடீரென்று அருவிகள் தோன்றின. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், நின்று ரசித்து செல்கிறார்கள். மேலும் சிலர் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.