பொள்ளாச்சி, செப்.27 - பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவி யில் நீர்வரத்து வழக்கத்தை விட அதிகரித்துள்ள தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையின ரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் குரங்கு அருவி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அருவில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏரளாமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று நீர் வரத்து மிகவும் அதிக அளவில் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குரங்கு அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.