tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் வார்டு மறுவரையில் குளறுபடி குறைதீர் கூட்டத்தில் வாக்காளர்கள் புகார்கோயம்புத்தூர்

திருப்பூர், நவ. 11- திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக மறு வரை செய்யப்பட்ட வார்டு பட்டி யலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட் டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சியில் 19 வார்டுகள் உள் ளன. இதில் 11ஆவது வார்டுக் குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் சுமார் 419 வாக்காளர்கள் உள்ள னர். இப்பகுதியில் ஒரே குடும் பத்தில் 4 பேர் வசித்து வரும் நிலை யில், இரண்டு வாக்காளர்கள் மட்டும் 7 வது வார்டு வி.எஸ்.வி காலனிக்கு   மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், பெரும்பகுதியான வாக்காளர்கள் 7 வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வார்டு சீரமைப்பில் குள றுபடி நடைபெற்றுள்ளது. எனவே, 7 ஆவது வார்டுக்கு மாற்றப்பட்ட வாக்காளர்களை முன்பு இருந்த தைப் போல 11ஆவது வார்டில் இணைக்க வேண்டுமென அப்ப குதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மடிக்கணினி கோரி

திருப்பூர் அருகே குமார் நகர் பகுதியில் பிசப் உபகரசுவாமி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாண விகளுக்கு தமிழக அரசின் இல வச மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதனால் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ஆசிரியர்களிடம் கேட்டால் உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். எனவே, உட னடியாக மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அடிப்படை வசதி 

தாராபுரம் அருகே கிரீன் சிட்டி மற்றும் அமராவதி நகர் பகுதி யில் 30க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, தெரு மின்விளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட் டுமின்றி மழைகாலத்தில் மழை நீர் தேங்கி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு வசதிக்கு ஏற்பாடு செய்யு மாறு மனு அளித்தனர்.  இதேபோல், திருப்பூர் அருகே காங்கயம் சாலையில் மகாலட் சுமி கார்டன், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். தண்ணீர், தெரு விளக்கு, சாலை வசதி, பேருந்து நிறுத்தம், உள்ளிட் டவை இல்லாத காரணத்தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித் தனர்.

வேலைகோரி மாற்றுத்திறனாளிகள் மனு

பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். மாற்றுத் திறனாளியான இவர் எம்பில் வரை படித்துள்ளார். ஆகவே, மாவட்ட ஆட்சியர் கருணை அடிப்படையில் தனக்கு வேலை ஏற்பாடு செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.