tamilnadu

img

வீடியோவை காட்டி பணம் பறிக்கும் பெண் காவலர்

கோவை, ஆக.6–  வீடியோவை காட்டி பெண் காவலர் தொடர்ந்து பணம் பறிப்பதாக குற்றம்சாட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் டிராவல்ஸ் அதிபர் செவ்வா யன்று புகார் அளிக்க வந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த வர் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் பெண் காவலர்கள் மீது புகார் அளிக்க வந்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், காவலர் கவிதா அவருடன் தான் தனிமையில் ஒன்றாக இருந்த வீடியோவை வைத்து கொண்டு அவரும் அவரது தோழி மைதிலி ஆகியோ ரும் என்னிடம் தொடர்ந்து பணம் பறித்து வருகின்றனர். மேலும், இதுவரை தன்னி டம் ரூ.3 லட்சம் வரை பணம் பறித்து விட்ட நிலையில், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டு கிறார் என அவர் தெரிவித்தார். இச்சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;