tamilnadu

img

திருப்பூரில் பல்வேறு அமைப்புகள் கடைப்பிடிப்பு

காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் 

திருப்பூர், அக். 2- மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு  அமைப்புகள் அவரது சிலைக்கும்,  உருவப்படத்துக்கும் மலர் தூவி  மரியாதை செலுத்தினர். திருப்பூர் காந்திநகரில் உள்ள சர்வோதயா சங்க வளாகத்தில் மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு புதன் கிழமை காலை திருப்பூர் சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் பி.மோகன், பி.ஆர்.நட ராஜன், ஆர்.ஈஸ்வரன், வே.முத்துராம லிங்கம், எஸ்.பத்மநாபன் உள்பட ஏராளமானோர் அவரது உருவப்  படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் ஏவிபி லே அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்தோர் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு காலை 7 மணியளவில் ஏவிபி  லே அவுட் விரிவு பகுதியில் இருந்து ஊர்வலமாக காந்திநகர் சர்வோதயா சங்கத்திற்கு வந்தனர். இதில் குழந்தைகள் காந்தி முகமூடி  அணிந்து வந்தனர். அங்கு காந்தி  உருவப்படத்துக்கு மலர் தூவி  மரி யாதை  செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் டி.என்.துரை தலைமை வகித்தார். எஸ்.அசோக்குமார் வரவேற்றார். செந்தூர் நிட்ஸ் ஆர்.சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் அ.மணவாளன் ஆகியோர் காந்தியை நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தினர். முடிவில் பொருளாளர் வி.பழனிசாமி நன்றி கூறினார். வேலவன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வாகனங்களில் அழைத்து வரப்பட்டு காந்தி அஸ்திக்கு  மரியாதை செலுத்தப்பட்டது. இது போல் பல்வேறு அமைப்பினரும் காந்தியை நினைவு கூர்ந்தனர்.

கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்
 

திருப்பூர் குமார் நகர் கதர் அங் காடி வளாகத்தில் காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின்  உருவப் படத்துக்கு  மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் மலர் தூவி மரியாதை செலுத் தினார். இதைத் தொடர்ந்து கதர் சிறப்பு விற்பனையையும் அவர் தொடக்கி வைத்தார். இங்கு கதர் ரகங் களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங் கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுதந்திரப்  போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசு களுக்கு கதர் ஆடை வழங்கி சிறப்பித் தார். இதில் கதர் கிராமத்  தொழில்கள் இயக்குநர் ரவிக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜான் ஜெகத் பிரைட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறுபூலுவபட்டி பகுதியில் பாலர்  அரங்கத்தைச் சேர்ந்த 20 சிறுவர்கள்  காந்தி முகமூடி அணிந்து அப் பகுதியில் ஊர்வலமாக வந்தனர். இந் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிடிஆர் நகர் கிளைச் செயலாளர் சதா சிவம், மணி, சதீஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். அதேபோல் திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.