தருமபுரி அக்.8- நல்லம்பள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தை வட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அப்பகுதி மக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி உள்ளடக்கி தருமபுரி வட்டமாக இருந்தது. மக்கள் நலன் கருதி தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி பிரிக்கப் பட்டு கடந்த 5 ஆண்டு களுக்கு முன் புதிய வட்டம் உருவாக்கப்பட்டது. நல்லம்பள்ளி வட் வட்டத்தில் பாளையம்புதூர், தொப்பூர், பாகல் அள்ளி, மானியதஅள்ளி, அதியமான்கோட்டை, தின்னஅள்ளி, இண்டூர், பண்டஅள்ளி உள்பட 30 ஊராட்சிகள் உள்ளன. இங்கு ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. தருமபுரி மாவட்டம், சேலம் மாவட்டத்தை பிரிக்கும் இடமாக தொப்பூர் கனவாய் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தருமபுரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் மருத்துவச் சிகிச்சைக்கு தருமபுரி செல்லவேண்டியுள்ளது. தருமபுரி மாவட்ட எல்லையில் இருப்பவர்கள் தருமபுரிக்கு செல்ல வெகு நேர மாகும். எனவே நல்லம்பள்ளியில் தற்போது உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டதலைமை மருத்துவமனையாக மாற்றி நவீன வசதிகளுடன் 24 மணிநேரமும் இயங்கும்படி அமைக்கவேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவ டிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியு றுத்தியுள்ளனர்.