tamilnadu

img

உடுமலை: குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை, டிச. 20- குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக உடுமலையில் அனைத்து இஸ்லாமிய கூட்ட மைப்பு சார்பில் வெள்ளியன்று  கண்டன ஆர்பாட்டம் நடைபெற் றது.  மத்திய அரசு கொண்டு வந் துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதி வேட்டுக்கு எதிராக நாடு முழு வதும் போராட்டங்கள் பரவி வருகிறது. இந்நிலையில் உடு மலை, மடத்துக்குளம் வட்டார அனைத்து பள்ளிவாசல் நிர்வா கிகள் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் வெள்ளி யன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.எம்.சையதுஈசா பைஜி தலைமை தாங்கினார். திமுக மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர செயலா ளர் தண்டபாணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் ரனதேவ், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், திராவிடர் கழகத்தின் நாகராஜன், மனித நேய மக்கள் கட்சியின் அப்துல்கய்யும், ஆதி தமிழர் பேர வையின் வெள்ளிமலை மற்றும் பூர்வீக பள்ளி செயலாளர் தாஹீர் பாசா உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.