tamilnadu

உதகை மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 

உதகை, டிச 12 மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை  சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவி களுக்கு கல்வி உதவிதொகைவழங்குவதற்கு தமிழக அரசு  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியிலடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங் களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய  பல்கலைகழங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்ப டிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தலா ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை அறிவித்துள்ளது. இவர்களின் குடும்ப வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்வோர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகம், பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு பணிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்கள் கணினி சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி

நாமக்கல்,டிச.12- ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி களில் வாக்குப்பதிவு பணிகளில் பணியாற்றவுள்ள அலுவ லர்களை கணினி மூலம் சுழற்சி முறையில்  முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலை மையில் புதனன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகளும், 15 ஊராட்சி ஒன்றியங்களும், ஊராட்சி ஒன்றிய குழு 172 வார்டுகளும், 322 கிராம ஊராட்சிகளும், கிராம ஊராட்சிகளில் 2,595 வார்டுகளில் 8,60,896 வாக் காளர்கள் உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய நாட்களில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக, கபிலர்மலை, கொல்லி மலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளை யம், இராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும்,  இரண்டம்கட்டமாக, எலச்சிபாளையம், எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகளில் பணி யாற்ற உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி  முறையில்  முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன் அடிப்படையில் பணி ஆணைகள் தயாரிக்கப்பட்டு சம்மந் தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் வீரகனூர் ஏரிக்கரை

சேலம், டிச.12- சேலம் மாவட்டம், வீரகனூர் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது. இந் நிலையில், மது பாட்டில் களை  வாங்கி வரும் போதை  ஆசாமிகள் ஏரியின் கரை யிலேயே அமர்ந்து மது  அருந்திவிட்டு, அங்கேயே  கண்ணாடி பாட்டில்களை யும் பிளாஸ்டிக் குப்பை களையும் போட்டு ஏரியை அசுத்தப்படுத்தாக விவசாயி கள் வேதனை தெரிவிக் கின்றனர். ஆகவே. உடன டியாக ரோந்து போலீசார் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டு, இச் செயலில் ஈடுபடுவர்களை ஒடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த கோழிப்பண்ணை அமைக்க நடவடிக்கை - கால்நடைத்துறையினர் தகவல்

கோவை, டிச. 12 –  கோவை அரசூரில் மூடப்பட்ட அ ரசு கோழிப்பண்ணையை விரைவில் சீரமைத்து ஒருங்கிணைந்த கோழி பண்ணையாக மாற்றம் செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சூலூரை அடுத்த அரசூர் ஊராட்சி பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் கோழி அபிவிருத்திக் கான பண்னை அமைக்க முடிவுசெய் யப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசூரில் கடந்த  1966ல் நிறுவப்பட்டது. பின்னர்,  1976ல் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோழிப்பண்ணை மற் றும் அலுவலகம், ஊழியர் குடியி ருப்பு, ஆய்வகம், முட்டை விற்பனை யகம் என பல்வேறு கட்டமைப்பு வச திகளுடன் அபிவிருத்தி திட்டம் செயல்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த 1996ல் பல்வேறு காரணங்களினால் அரசு கோழிப்பண்ணை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கட்டிடம் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடார மாக மாறியுள்ளது. மேலும், கட்டிடத் தின் கதவு,  ஜன்னல்கள்,  மரப்பொ ருட்களை மர்ம நபர்கள் திருடி செல் கின்றனர். இந்நிலையில், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் பயனடை யும் வகையில், இந்த கட்டிடத்தை சீரமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் கால்நடை தீவன தோட்டம் அமைத்து ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை யாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் தமிழக அரசிற்கு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவிற்கு தற்போது கோவை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி பதில் அளித்துள்ளார். அதில், கோழி அபிவிருத்தி நிறுவனம் மற்றும் டாப்கோ கோழி குஞ்சு பொறிப் பகத்தை சீரமைத்து ஒருங்கிணைந்த கோழிப்பண்ணையாக மாற்ற தலைமை அலுவலகத்திற்கு கடந்த  நவம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் தலைமை அலுவலக ஒப்புதல் கிடைத்தவுடன் ஒருங்கிணைந்த கோழிப்பண்ணை யாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால், விரைவில் மூடப் பட்ட அரசு கோழிப்பண்ணை சீர மைக்கப்பட்டு ஒருங்கிணைந்த கோழிப்பண்ணையாக திறக்கப்படும் என தெரிகிறது.

25.85 லட்சத்திற்கு பருத்தி ஏலம் 

அவிநாசி, டிச. 12- அவிநாசி ஏல மையத்தில் 25.85 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில்  பருத்தி ஏலம் நடைபெற்றது.  இந்த வாரம் நடந்த ஏலத்திற்கு 1534 மூட்டை பருத்தி வந்தது.  இதில் ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டாலுக்கு  ரூ.4500 முதல்  ரூ.5350 வரையிலும், மட்டரகம் குவிண்டாலுக்கு  ரூ. 2000 முதல் ரூ.3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில்  எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.25.85 லட்சம் ஆகும்.