tamilnadu

img

அடையாள அட்டைபெற மாற்றுத்திறனாளிகள் அழைக்கழிப்பு

தருமபுரி, ஜூலை 15- தேசிய அடையாள அட்டை பெறவந்த மாற்றுத்திறனாளிகளை மருத்துவர்கள் அழைக்கழிப்பு செய்வதாக கூறி தருமபுரியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெறு வதற்கு மாதத்தில் முதல் மற்றும் 3 ஆம் வாரம் திங்கட்கிழமை நாளில் முகாம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ஜூலை 15 ஆம் தேதியன்று தருமபுரியில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலு வலகத்திற்கு தேசிய அடையாள அட்டைபெற நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்திருந்தனர்.  தேசிய அடையாள அட்டை பெறு வதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய  எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் ஆகிய 4 பிரிவு களை சேர்ந்த மருத்துவர்கள் பரி சோதனை செய்த பின்பு ஊனத்தின் தன்மைக்கேற்ப சான்றிதழ் வழங்கப் படுகிறது. மருத்துவ பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் மதியம் 1 மணியோடு முகாமை முடித்துக் கொண்டனர். மீதம் இருந்தவர்களை அடுத்த முகாமுக்கு வருமாறு அறி வுறுத்தினர். குறிப்பாக, அரூர் வட்டம், சிட் லிங் மற்றும் நரிப்பள்ளியில் இருந்து 100 கிலோ மீட்டருக்கு மேல் பய ணம் செய்து நாங்கள் வருவதற்கு ஆட்டோவிற்கு ரூ.1,000 செலவ ழித்து வந்திருக்கிறோம் எங்களை திருப்பி அனுப்பினால் எப்படி என  மாற்றுத்திறனாளிகளும் அவர் களின் பாதுகாவலர்களும் கேள்வி  எழுப்பினர். மேலும் பலர் இரண்டு முகாம் வந்தும் சான்றிதழ் கிடைக்க வில்லை என அலுவலரிடம் தெரி வித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் தலைமையில் மாவட்ட அலுவ லகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம்  மாவட்ட அலுவலர் பாபு மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர்.  பின்னர் உடனே மருத்துவர்களை வரவழைத்து மருத்துவச்சான்றிதழ் பெறவும், தேசிய அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிய ளித்ததின் அடிப்படையில் போராட் டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.