tamilnadu

திருப்பூர் மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராமதாஸ்

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கண்டனம்

திருப்பூர், ஜூன் 25 – ஊடகத்துறையினரை தரக்குறைவாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று சங்கத்தின் மாதாந்திரக்  கூட்டம் செய்தியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் இரா.கார்த்தி கேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராமதாஸைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் ஈரோட்டில் விலையில்லா மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராடியதை செய்தி சேகரித்த தமிழ் இந்து, ஜூனியர் விகடன் செய்தியாளர் களை ஆளும்கட்சியைச் சேர்ந்தோர் தாக்கி யுள்ளனர். இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூரில் கடந்த 18 வருடங்களாக செய்தியாளர்கள் பயன்படுத்தி வந்த குமரன் சாலையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடம் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் அப்புறப்படுத்தப்பட உள்ளது. எனவே செய்தியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை வற்புறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த  கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட செய்தியா ளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரை செய்தியாளர்கள் நேரில் சந்தித்து மாற்று இடம் வழங்கக் கோரி மனுக் கொடுக்கப்பட்டது.

240 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 25- அரசு போக்குவரத்து கழகத்தில் 240 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் (சிஐடியு) 31 ஆவது ஈரோடு மாவட்ட மாநாடு நம்பியூரில் திங்களன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் ஆர்.ரகுராமன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். சம்மேளனத் தலைவர் ரங்கசாமி வரவேற்றார். பொதுச்செயலாளர் டி.ஜான் சன்கென்னடி அறிக்கையை முன்மொழிந்து பேசினார். சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநாயினார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்ரமணியன், உதவி செயலாளர் சி.அய்யாசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தீர்மானங்கள்

இம்மாநாட்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணியாற்றிய ஆர்.சி, ஆர்.டி தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். அனை வருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பேருந்துகளில் நடத்துனர் இருக்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனே பணப்பலன்களை வழங்கிட வேண்டும். ஓட்டுநர் பாதுகாப்பு நிதி வழங்க வேண் டும். கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப் படாத சீருடை, தையல் கூலி, காலனி போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து மாநாட்டில் சங் கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக கே.மாரப்பன், பொதுச்செயலாளராக, டி.ஜான்சன் கென்னடி, மாவட்ட பொரு ளாளராக ஜி.பழனிச்சாமி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

லாரிகளில் அனுப்பும் ஏற்றுமதி பின்னலாடைகளை வழிமறித்துத் திருடும் கும்பல்: டீ சங்கம் எச்சரிக்கை

திருப்பூர், ஜூன் 25- வெளிநாடுகளுக்கு கப்பல்களில் அனுப்புவதற்காக லாரிகள் மூலம் தூத் துக்குடிக்கு அனுப்பும் ஏற்றுமதி பின்ன லாடைகளை திருட்டு கும்பல் வழிமறித்துத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. எனவே ஏற்றுமதியாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படும்படி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ) எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தயாரித்து அனுப்பப்படும் பின்னலாடைகள், அட் டைப் பெட்டிகளில் வைத்து லாரிகள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்புவது வழக்கம். ஏற்றுமதி பின்னலாடைகளை கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரி களை சமீப நாட்களில் விருதுநகரை அடுத்து பந்தல்குடி என்ற இடத்தில் நிறுத்தி, திருட்டு கும்பல், வெளிநாடுகளுக்கு அனுப்பும் பின்னலாடை பெட்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி சங்கத்தின் நான்கு  உறுப்பினர்களின் சரக்குகள் இதுபோல் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஏற்றுமதி யாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண் முகம் தெரிவித்துள்ளார். மேற்படி சரக்கு லாரிகளை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி முழுமையான சுங்க சோதனை நடத்தும்போதுதான் மொத்த சரக்குகளில் இருந்து சில பெட்டிகள் திருடப்பட்ட விபரம் தெரியவருகிறது என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்குப் பதிவு செய்து இந்த குற்றங்களில் ஈடுபட்ட திருட்டு கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாக ராஜா எம்.சண்முகம் கூறியுள்ளார். காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த திருட்டு சம்பவங்களுக்கு திருப்பூரில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களும் உடந் தையாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் லாரியை நிறுத்தி னால் அவர்களுக்கு ரூ.5000 வரை பணம் கொடுக்கப்படுகிறது. அப்படி நிறுத்தப் பட்ட நிலையில்தான் பின்னலாடை சரக்குகள் திருடப்படுகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. எனவே பின்னலாடை சரக்குகளை அனுப்பும் ஏற்றுமதியாளர்கள் இனி கவனமாக செயல்படும்படியும், ஜிபிஎஸ் எனப்படும் வழித்தடத்தைக் காட்டும் கருவியை பொருத்திய லாரிகளில் சரக்கு களை அனுப்பும்படியும், இதனால் அந்த சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் எந்த இடத்தில் செல்கின்றன என்ற விப ரத்தை அறிய முடியும். மேலும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்றால்  அதற்கு சரக்குகளை அனுப்பும் லாரி நிறு வனங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே நம்பகமான சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் தங்கள் ஏற்றுமதி பின்னலாடைகளை அனுப்புவதை ஏற்று மதியாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளும் படியும் ராஜா எம்.சண்முகம் கூறியுள்ளார்.