மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அன்பு இல்லம் நிறுவனர் தலைமறைவு
திருப்பூர், செப். 22 – திருப்பூர் வசதியற்ற குழந்தைகள் விடுதியை நடத்தி வந்த நிறுவனர் ராஜசேகர் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் பதிவு செய்யப்பட் டுள்ளது. இங்கு தங்கியிருந்த மாணவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நிறுவனர் ராஜசேகர் தலைமறை வானார். அவரை காவலர்கள் தேடி வருகின்றனர். திருப்பூர் அன்பு இல்லத்தின்கீழ் விவேகானந்தா குரு குலம் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள் ளியில் வசதியற்ற குழந்தைகள் அங்கேயே தங்கிப் படித்து வருகின்றனர். ஆறு முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகர் (50) மாணவர்களிடம் தகாத முறையில் நடப் பதாகத் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து இப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு சிறுவர்களிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. இதில் நிறுவனர் ராஜசேகர் குழந்தைகளி டம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரியவந்தது. இதையடுத்து இங்கு தங்கிப் படித்த 62 மாணவர்களையும் வேறு இடத்திற்கு மாற்றினர். மாவட்ட குழந்தைகள் நலக் குழு சார்பில் ராகுல் என்பவர் பெருமாநல்லூர் காவல் நிலை யத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
அவிநாசி, செப். 22- ஆட்டையம்பாளையம் பகுதியில் கோவை செல்லும் பிரதான சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந் துள்ளது. அவிநாசியிலிருந்து கோவை செல்லும் சாலையில் ஆட்டையம்பாளையம் உள் ளது. இப்பகுதியில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக வருவ தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம் அரு கில் வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது.
உயர்மின் கோபுர எதிர்ப்பியக்க தலைவர்களை விடுதலை செய்க!
குண்டடத்தில் செப்.25ல் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர், செப். 22 – சிறை வைக்கப்பட்ட தலைவர் களை நிபந்தனையின்றி விடு தலை செய்ய வலியுறுத்தி குண்ட டம் கிராமத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று உயர் மின் கோபுர எதிர்ப்பு விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. திருப்பூரில் சனியன்று உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டியக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், சிறைபட்டுள்ள கூட் டியக்கத்தின் தலைவர்களுக்கு பிணை பெறுவது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை செய்யப் பட்டது. தொடர் சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தலைவர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 25 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் பெருந்திரளான விவசாயிகளைப் பங்கேற்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டியக்கத்தின் நான் காண்டு கால முயற்சி, போராட் டத்தின் விளைவாக, விவசாயிக ளுக்குக் கூடுதல் இழப்பீடு தொகை கள் வழங்குவது உள்ளிட்ட பலன் கிடைத்து வருகிறது. இந்த கூட்டியக்கத்தின் முக்கிய கோரிக் கையான புதைவட (கேபிள்) திட்ட மாக மாற்றுவது, பாதிக்கப்படும் நிலத்திற்கு முழு இழப்பீடு, வருட வாடகை உள்ளிட்ட இதர கோரிக்கைகளை தொடர்ந்து விரி வாக முன்னெடுப்பது என தீர்மா னிக்கப்பட்டது. அத்துடன், நீதி மன்ற நடவடிக்கை உள்பட சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தலை வர்கள் வெளியே வந்தபின் விரி வாக திட்டமிட்டு அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இச்சமயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டு உறுதியோடு செயல்பட வேண்டும் என்றும் கூட்டியக்கம் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டது.