tamilnadu

திருப்பூர் ,உடுமலை முக்கிய செய்திகள்

திருப்பூரில் இளைஞர்  வெட்டிக் கொலை

திருப்பூர், செப். 2 –  திருப்பூரில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த இளைஞரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி யில் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சிறுபூலுவப்பட்டி, காவிலிபாளையம் பிரிவுப் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (38).  இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 13 வயது மகனும் உள்ளனர். இவர் கல்லூரி சாலையில் அய்யப்பன் கோயில் அருகே கடந்த நான்கு ஆண்டு களாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். அத்துடன் பின்னலாடை உற்பத்தியாளர்கள் உட்பட பலருக்கும் வட்டிக்குப் பணம் அளித்து, வசூலித்து வந்துள்ளார்.  இந்நிலையில், ஞாயிறன்று இரவு 8 மணியள வில் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்கள் பால முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்து டன் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள் ளிட்ட ஆயுதங்களால் அவரை திடீரென தாக்கத் தொடங்கினர். அவர் பயந்து ஓட முயன்றபோதும், அவரை அந்த கும்பல் விரட்டிச் சென்று கடுமையாகத் தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த  சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக வடக்கு காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சட லத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  போக்குவரத்து நெருக்கடியும், மக்கள் நடமாட் டமும் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கொலை செய்யப் பட்ட பாலமுருகன் பைனான்ஸ் நடத்தி வந்த நிலை யில், வரவு செலவு பிரச்சனை காரணமாக கொல்லப் பட்டாரா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தலைகவசம் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராத நோட்டீஸ்

திருப்பூர், செப். 2 – திருப்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர்  காரில் சென்றபோது தலைகவசம் அணியவில்லை  என்று அபராதம் கட்டுமாறு போக்குவரத்து காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செல்வக்குமாரின் வாகன எண் குறிப்பிடப்பட்டு, அந்த வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அவரது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த அபராத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண் அவர் பயன்படுத்தும் காரின் பதிவு எண் ஆகும். மேலும் விதிமுறையை மீறி அவர் வாகனத்தில் சென்ற இடம் தாராபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ள நேரத்தில், செல்வக் குமார் திருப்பூரில் தான் இருந்திருக்கிறார். இந்நிலையில் இந்த அபராத நோட்டீஸ் அனுப் பப்பட்டிருப்பது செல்வக்குமாருக்கு அதிர்ச்சியை யும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது காரின்  பதிவு எண்ணில் வேறு யாரேனும் மோசடி யாக இருசக்கர வாகனம் இயக்கி வருகிறார்களா  என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஏனெனில் சென்னையிலும் இதுபோல் ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளது. மேலும் காவல் துறை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்துள் ளதா என்ற கோனத்திலும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து இதில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கவனித்து அதை உடனடியாகச் சரி செய்து, மேற் கொண்டு இது போன்ற குளறுபடிகள் வராமல் தவிர்க்க  வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

உடுமலை, செப். 2- கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்க உடுமலை நூலக வாசகர் வட்டம் அழைப்பு விடுத்துள்ளது. உடுமலை கிளை நூலக (எண் 2)  வாசகர் வட்டம்  மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து ஆசிரியர் தினம், உலக எழுத்தறிவு தினம்  மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா பிறந்த தினவிழா நிகழ்ச்சிகளுக்காக கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாண வியர், வாசகர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை செப்.4ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஞாயிறன்று (செப்.8) போட்டிகள் நடைபெறும். செப்டம்பர் 15ஆம்  தேதி அண்ணா பிறந்த நாளில் வெற்றி பெற்றவர் கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

இலக்கியப் பெருமன்ற மாதாந்திர கூட்டம்

திருப்பூர், செப். 2 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கலை இலக் கியப் பெருமன்றத்தின் செப்டம்பர் மாதக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் ஞாயிறன்று புஷ்பா சந்திப்பு ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எழுத் தாளர் சுப்ரபாரதிமணியன் தொகுத்த ஓ..சிங்கப்பூர் நூலை பேராசிரியர் கோகிலச் செல்வி வெளியிட்டார். கோவை தெ.வி.விஜயகுமாரின் குழந்தைப் பருவத்து நினைவுகள் நூலை சேவ் அமைப்பின் பிரான்சிஸ்  வெளியிட்டார். சி.ந.சந்திரசேகரனின் அம்பேத்கரு டன் ஒரு நேர்காணல் என்ற நூலை வேனில் கிருஷ் ணமூர்த்தி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திருப்பூரில் திரைப்படச் சங்க நிர்வாகி வி.டி.சுப்பிரமணியனின் கலை இலக் கியச் செயல்பாடுகளுக்காக பாராட்டுத் தெரிவிக் கப்பட்டது. ஓலைச்சுவடி பாதுகாப்பு மற்றும் அவற் றின் புத்தகப் பதிப்பித்தலுக்கும் ஆசிரியர் வே.சுந்தர கணேசனுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் குறும்பட விருதுகள் 2019 து.சோ.பிரபாகர், ரா.தீபன், தி. ஜெயப்பிரகாஷ், ரா.ரமேஷ், இரா.சின் ராசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஒரே வளாகத்தில் செயல்படும் பள்ளிகள்

திருப்பூர், செப். 2- திருப்பூர் மாவட்டத்தில் ஒரே வளாகத்தில் செயல் படும் பள்ளிகளின் பட்டி யல் கல்வித்துறைக்கு அனுப் பப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் செயல் பட்டு வரும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர் நிலை பள்ளிகள் தொடர் பான அறிக்கையை கல்வித் துறை கேட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் ஆய்வு அதிகாரிகளாகக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் தயாரிக் கப்பட்டு தொடக்கக் கல் வித்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை யில், 41 இடங்களில் தொடக்க, நடுநிலை மற் றும் உயர்நிலைப் பள்ளி கள் செயல்பட்டு வருகின் றன என கூறப்பட்டுள்ளது.