கிசான் அட்டையில் பிணையம் இல்லா கடன் வரம்பு ரூ.1.60 லட்சமாக உயர்வு
திருப்பூர், ஜூலை 18 – விவசாயிகள் கிசான் கடன் அட்டைக் கான கடன் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வியாழ னன்று விடுத்துள்ள அறிக்கை: சொந்த நிலம் உள்ள விவசாயிகள், குத்தகை விவ சாயிகள், கூட்டு சாகுபடியாளர்கள் கொண்ட சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் கிசான் கடன் அட்டை பெறத் தகுதி உடை யவர்கள். தற்போது ரிசர்வ் வங்கி கிசான் கடன் அட்டையின் பிணையம் இல்லா கடன் வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.60 லட்ச மாக உயர்த்தியுள்ளது. மேலும் வங்கிகளின் செயல்முறை கட்டணம், ஆய்வு கட்டணம் போன்றவற்றை தள்ளுபடி செய்ய வங்கி களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்து வோருக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வட்டி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. தேசியமயம் ஆக்கப் பட்ட வங்கிகள் வட்டி விகிதத்தில் 4 சத விகிதம் வரை குறைப்பு செய்யவும் ஆவண செய்துள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு அரு காமையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தேசியமய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக் கலைத் துறை ஆகியவற்றை அணுகி கிசான் கடன் அட்டை திட்டத்தைப் பற்றிய விவரங்களை முழுமையாக பெற்று பயன் அடையலாம் என்று கூறியுள்ளார்.
திருப்பூரில் மாணவர்களுக்கு தமிழ் மொழி சிறப்புப் பயிற்சி
திருப்பூர், ஜூலை 18 - திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ், அரிமா சங்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு “தமிழ் மொழி சிறப்புப் பயிற்சி”ஒரு நாள் முகாமை நடத்தின. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிர் வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அரிமா சங்க தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். இப்பயிற்சி வகுப்பில் தமிழில் பிழையின்றி எழுத, உச்சரிக்க 5-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சி வழங் கப்பட்டது. சென்னையை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி விரல சைவு விளையாட்டு எனும் எளிய முறையில் தமிழ்ப் பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கி ணைப்பாளர் யோகி செந்தில் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
கொலை மற்றும் கொள்ளைகளால் அவிநாசி பகுதி மக்கள் அச்சம்
அவிநாசி, ஜூலை 18- அவிநாசி அடுத்த கந்தம்பாளையம், விஷ்வபாரதி நகர் பகுதிகளில் நிகழும் கொலை மற்றும் திருட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், வடுககிராமம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் அவி நாசி செம்பியநல்லூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் நூற்பாலையில் பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் புதனன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டி ருந்தார். அப்போது கந்தம்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை அருகில் அடை யாளம் தெரியாத நபர்கள் கணபதியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி யோடிவிட்டனர். இவரின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், கண பதியை மீட்டு அவிநாசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி உயிரிழந்தார். அவிநாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவிநாசி அருகே விஸ்வகர்மா நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் புதனன்று இரவு முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சத்தத்தின் அதிர்வை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்ததை கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடினர். தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த இரு சம்பவங்கள் அவிநாசி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. முன்னதாக கடந்த நான்கு நாட் களுக்கு முன்பு அப்பகுதியில் 40 பவுன் நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.
இன்று மின்தடை
திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (ஜூலை 20) வெள்ளியன்று மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பூர் குமார்நகர் துணை மின் நிலை யத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ராம மூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக் காடு, கருமாரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜி நகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர் லே-அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேச புரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ். நகர், புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகர் ஆகிய பகுதி களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
கண்வலி விதைக்குப் பொருளீட்டுக்கடன் வழங்கக்கோரி முதல்வரை நேரில் சந்திக்க முடிவு
திருப்பூர், ஜூலை 18- கண்வலி விதைக்குப் பொருளீட்டுக் கடன் வழங்கக்கோரி முதல்வரை நேரில் சந்திப்பதென்று தமிழ்நாடு கண்வலி விதை விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள் ளனர். தமிழ்நாடு கண்வலி விதை விவ சாயிகள் சங்க அலுவலகம் திறப்பு விழா மூலனூரில் புதனன்று நடைபெற்றது. நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் தலைவர் அ.பொ.கந்தசாமி அலுவல கத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு கண்வலிவிதை விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ப.லிங்கசாமி முன்னிலை வகித்தார். கண்வலி விதையை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெளிப்படையாக விற்பனை செய்ய வேண்டும் என கோரியும், விதைக்கு பொருளீட்டுக் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் தமிழக முதல்வரை சந்திக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் விதையின் அளவு, உற்பத்தி பரப்பு, விற்பனை, விதை கை யிருப்பு ஆகியவை தொடர்பான முழுமை யான புள்ளிவிவரங்களை சங்கத்தின் மூலம் சேகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.