tamilnadu

ஒரு இட்லி சாப்பிட  27 சாதிகளின் உழைப்பு தேவை சிந்திக்க வைத்த அன்னூர் கலை இரவு

அன்னூர், மார்ச் 1- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து 11 ஆம் ஆண்டு கலை இரவு  நடத்தியது. இதில் புதுகை பூபாளம் கலைக்குழுவி னரின் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இட்லி சாப்பிட வேண்டுமென்றால் 27 சாதியினரின் உழைப்பு தேவைப்படுகிறது. அதேபோல மானத்தை உடை உடுத்த 35 சாதியினரின் உழைப்பு தேவை. அதேபோல மதரீதியாக மக்களை பிளவு படுத்தும் குடி யுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையோடு விளக்கப்பட்டது. ஆரம்பக் கல்வி முதல் முனைவர் பட்டம் பயில்வோர் வரையி லானோர் இடம் பெற்ற இருபாலரும் இசைத்த பறையிசை சாதிகளுக்கு எதிராக ஒலித்தது.  முன்னதாக அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்த்தது. இதில் பிரபல தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங் கேற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெற்ற குழந்தைக ளின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்நிகழ் வில் வாலிபர் சங்க நிர்வாகிகள் சரவணன், மகேந்தி ரன், அர்ஜுன், சிபிஎம் செயலாளர் முசீர் மற்றும்  தமுஎகச நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.