tamilnadu

img

தியாகி வி.ராமசாமி 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், ஜூலை 23- சுதந்திர போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச் செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் வி.ராம சாமி நினைவு தினம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஒன்றியம் மோளிபள்ளி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தோழர்.வி.ராம சாமி 20 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு சிபிஎம் கிளைச் செய லாளர் ஆர்.குப்புசாமி தலைமை  வகித்தார். நினைவுதின கொடி யினை மாவட்ட செயற்குழு உறுப் பினர்  ஏ.ஆதிநாராயணன் ஏற்றி வைத் தார். திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மாலை அணிவித்தார். திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே. பூபதி உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் தங்கவேல் நன்றியுரை யாற்றினார். இதேபோல், கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி தலைமையில், மாவட்ட குழு உறுப் பினர்கள் பி.செங்கோடன், கு.சிவ ராஜ், மணிவேல் மற்றும் கட்டுமான சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு திருவுருவ படத் திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  எலச்சிபாளையம் ஒன்றியம் நல்லி பாளையம் கிளையில் மாவட்ட குழு உறுப்பினர் பி.செங்கோடன் தலை மையிலும், எலச்சிபாளையத்தில் கிளையில் செயலாளர் ஏ.சந்தி ரன் தலைமையிலும், சின்ன எலச் சிபாளையத்தில் ஒன்றிய குழு உறுப் பினர் பி.சுரேஷ் தலைமையிலும் திருவுருவ படத்திற்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.  பள்ளிபாளையம் காவேரி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப் பினர் இ.கோவிந்தராஜ். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் சிபிஎம் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராசிபுரம் சிபிஎம் அலுவலகத்தில் பிரதேச குழு செயலாளர் செல்வராஜ்  தலைமை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மேரும், திருச்செங்கோடு ஒன்றி யத்தில் ஆண்டிப்பாளையம்,  சித் தளந்தூர்,பொம்மக்கள்பாளையம், கருப்பம்பட்டி, சூரியம்பாளையம்,  சித்திரம்பாளையம், அண்ணாநகர், எட்டிமடை உள்ளிட்ட கிளைகளில் தோழர் வி.ராமசாமியின் படம்  வைத்து நினைவாஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன், ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயு தம், நகரச் செயலாளர் ஐ.ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;