tamilnadu

img

சித்ரவதை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை கோரி திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருப்பூர், ஆக. 26 - உயர் மின்கோபுர நில அளவை பணியை ஆட்சேபித்த விவசாயி களை சித்ரவதை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஏடி எஸ்பி மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்  அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். திருப்பூர் மாவட்டம், வாவி பாளையம் கிராமத்தில் ஞாயி றன்று நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் எஸ்பி. அலுவல கத்துக்கு விவசாயிகள் திங்க ளன்று திரண்டு வந்தனர். அவர் களை மாவட்ட காவல்அலுவல கத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய வாயில் காவ லர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டும் உள்ளே செல்லும்படி கூறினர். இதையடுத்து விவசாயிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கண் காணிப்பாளர் அறைக்குள் செல்வ தற்கு கட்டுப்பாடு விதித்தால் பர வாயில்லை, மாவட்ட காவல் அலு வலகத்திற்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம் என தடுப்பது ஏற்புடை யதல்ல என்று வாதிட்டனர்.  அத்துடன் வந்திருந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எஸ்.பி. அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்கள் அனை வரையும் உள்ளே செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் திஷா மிட்டலிடம் விவசாயி கள் தரப்பில் மனு அளித்து முறை யிடப்பட்டது. தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார், தற்சார்பு விவசாயி கள் சங்கத்தின் கி.வெ.பொன்னை யன், கட்சி சார்பற்ற தமிழக விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், த.வி.ச (சிபிஐ) மாநி லத் துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, வாக்காளர் எழுச்சிப் பேரவை கே.எல்.தெய்வசிகா மணி, ஐடிபிஎல் திட்ட எதிர்ப்புக் கூட்டியக்க விவசாயி எம்.வி.பால சுப்பிரமணியம், உழவர் உழைப் பாளர் கட்சித் தலைவர் கு.செல்ல முத்து, உயர் மின்கோபுர எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் சிவ.இரா.பார்த்தசாரதி ஆகி யோர் கையெழுத்திட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 22ஆம் தேதி வாவிபா ளையம் கிராமம் காளியப்பகவுண் டன் புதூரில் உயர் மின்கோபுரம் அமைக்க நில அளவைக்கு வந்த வருவாய்த் துறையினருடன், காவல் துறை கூடுதல் கண்காணிப் பாளர் குணசேகரன் வந்தார். விவ சாயி சென்னியப்பன் தனது நிலத்தில் வெங்காயம், அவரை சாகுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி நில அளவைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி வீசினர். அதேபோல் பெண் விவ சாயி பானுமதி, தனது இரண்டரை வயது குழந்தை நிகிலுடன் தனது நிலத்தில் அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்தபோது குழந்தையை யும், தாயையும் தரதரவென்று இழுத்துச் சென்று கொடூரமாகத் தூக்கி வீசினர். செல்வக்குமார் மனைவி சரோஜினியை நான்கு காவலர்கள் கையையும், காலை யும் பிடித்து ஆடையெல்லாம் கலைந்துவிட்ட நிலையில் அவ மானத்தை ஏற்படுத்தும் விதத்தில் தூக்கிச் சென்று வீசினர். முருக சாமி மனைவி வஞ்சிக்கொடியை பார்த்து தகாத வார்த்தை பேசி காயப்படுத்தினர். சிவகாமி என்ப வர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் ஏடிஎஸ்பி திட்டி னார். உடனிருந்த காவலர்கள் சிவகாமியை கடுமையாகத் தாக்கி வண்டியோடு கீழே தள்ளினர். அப் பகுதி மக்களின் தலைவர் பெரிய வர் வெங்கடாசலத்தை குணசேக ரன் ஒருமையில் கடுமையாகத் திட்டியதோடு, விவசாயிகளின் இலவச மின்சாரத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவனடியார் பார்த்தசாரதி மீது, கஞ்சா கேஸ் போடுவேன் என  அவர் பேசினார். குங்குமம்பாளை யம் முத்துச்சாமி என்பவரை பல் வேறு வழக்குகளில் உள்ளே தள்ளு வேன் என மிரட்டினார்.  காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்ட விவசாய குடும்ப பெண்களை கயிற்றில் கட்டி வைத்து பல மணி நேரம் வெயிலில் நிறுத்தி இயற்கை உபாதை கழிக்க கூட அனுமதிக்காமல் அராஜக மான நடவடிக்கையில் ஈடுபட்ட னர். பெண்களை காவல் துறை வண்டியில் ஏற்றி ஊர் சுற்றி பல கிலோமீட்டர் தூரத்தில் வழியில் இறக்கிவிட்டுச் சென்றனர். இவை யெல்லாம் ஏடிஎஸ்பி குணசேகரன் உத்தரவில் நடந்தது. எல்லாவித சட்டவிதிமுறை களையும் மீறி, விவசாயிகளின் சொந்த நிலத்தில் அத்துமீறி நுழைந்து விவசாயப் பயிர்களை நாசம் செய்து பவர்கிரீட், வருவாய் துறை, காவல் துறையினர் கடும் அத்துமீறல் செய்துள்ளனர்.  சொந்த நில உரிமைக்காக ஜன நாயக முறையில் போராடிய உழ வர் குடும்பத்து ஆண்கள், பெண் களை கடும் சித்ரவதை செய்த ஏடிஎஸ்பி குணசேகரனை பணி இடை நீக்கம் செய்து துறைரீதி யான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சி யருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் திஷா மிட்டல் கூறி னார். மேலும் ஆட்சியரிடமும் விவ சாயிகள் முறையிட்டனர். கோட் டாட்சியர் விசாரணை நடத்திட ஆட்சியர் உறுதியளித்ததாக விவ சாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டது.