மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
அவிநாசி, ஜூலை 25- அவிநாசியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி வியாழனன்று நடை பெற்றது. அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழை நீர் சேகரிப்பு குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணியில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மழை நீரை சேமிப்போம் என வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்திக் கொண்டு அவிநாசி கடைவீதி, கஸ்தூரிபாய் வீதி, கங்குவர் வீதி, செல்லாண்டியம்மன் கோவில் வீதி உள் ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இப்பேரணியில் பள்ளித் தலைமையாசிரியர் சகுந்தலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு சங்க அலுவலர் விபத்தில் பலி
அவிநாசி, ஜூலை 25- அவிநாசியை அடுத்து சேவூரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் கார்த்தி கேயன் (27). இவர் சேவூரில் உள்ள விவ சாய கூட்டுறவு வங்கியில் அலுவலராக வேலை பார்த்து வந்தார். வியாழனன்று அன்னூரை அடுத்து நாகம்மா புதூரில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தை யையும் பார்த்துவிட்டு கார்த்திகேயன் காரில் அவிநாசி நோக்கி வந்து கொண்டி ருந்தார். அப்போது அவிநாசியை அடுத்து ராமநாதபுரம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழுந்தது. இதில் கார்த்திகேயனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.