திருப்பூர், ஜூலை 5 - பின்னலாடை ஜவுளித் தொழிலுக்கு மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. சிறு, குறு தொழில்களுக்கு சலுகைகள் வழங்க வில்லை என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெள்ளி யன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் செய்தியாளர்களுக்கு நிதிநிலை அறிக்கை பற்றிய ஏற்றுமதியாளர்களின் கருத்தைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரும் தொழில் ஜவுளித் தொழில். ஆனால் இது அதிமுக்கியமானத் துறை என்ற கவனம் மத்திய அரசுக்கு வர வில்லை. இந்த துறைக்கு கவனம் செலுத்தி யிருந்தால் கூடுதல் சலுகைகள் வழங்கப் பட்டிருக்கும். ஆனால் பின்னலாடை ஜவுளித் தொழிலுக்கு இந்த பட்ஜெட் பெரியளவு கவனம் செலுத்தவில்லை. ரூ.250 கோடி வரையிலான பெரிய நிறுவனங்களுக்கு வருமான வரிச்சலுகை என்பதை ரூ.400 கோடி வரையிலான நிறுவ னங்களுக்கு என்று உயர்த்தியிருக் கின்றனர். அதேசமயம் சிறு, குறு தொழில் களுக்குத்தான் முதலில் சலுகை கொடுத் திருக்க வேண்டும். அந்த சலுகை வழங் காதது இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு குறை. வங்கியில்லாத நிதிநிறுவனங் களுக்கு நிதி உருவாக்க சலுகைகளை வழங்கியிருக்கிறார்கள். ரூ.1லட்சம் கோடி வரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசே ஆறு மாத கால உத்தரவாதம் அளிக் கிறது. அந்த நிறுவனங்களால் ஏற்படும் இழப்பை அரசே ஏற்பதாக கூறியிருக் கிறது. பல ஆண்டுகளாக நாங்கள் வலி யுறுத்தி வந்த திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு அடிப்படை வசதிகள் பற்றிய எதிர்பார்ப்பு இந்த பட்ஜெட்டில் வர வில்லை என்பது ஏமாற்றம். இவ்வாறு ராஜா எம்.சண்முகம் தெரி வித்தார்.