tamilnadu

img

திருப்பூர் அவிநாசி சாலை

திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகம் முன்பாக 73ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் தேசியக் கொடியையும், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் செங்கொடியையும் ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினர். வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.