tamilnadu

பாழடைந்த பள்ளி கட்டிடத்தால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்

கோவை,டிச.31- கோவை சூலூர் அருகே பாழடைந்த பள்ளி சுற்றுச்சுவ ரால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அருகே உள்ள குளத்துப்பாளையம் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல துவக்கப்பள்ளி  உள்ளது. இதில், 5  ஆம் வகுப்பு வரை ஆதிதிராவிட குழந்தைகள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம்  ஓடு வேயப்பட்டு பாழ டைந்த நிலையில் உள்ளது. இதில் பள்ளியின் சத்துணவு கூடத்தின் மேற்கூரை மற்றும்  காம்ப வுண்ட் சுவர்கள் சிலமடைந்து எந்த நேரத்திலும் குழந் தைகள் மீது விழும் அபாயம் உள்ளது. இவ்வளவு மோசமான பள்ளிக் கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு திங்களன்று நடைபெற்றது. ஆகவே, பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

;