மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
கோவை, டிச. 9 – வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோவை யில் திங்களன்று மாதர் சங்கத் தினர் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள் ளது. கோவையில் ரூ.150 முதல் 180 வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்திறனின் மையே வெங்காயத்தின் விலை உயர்விற்கு காரணமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து நாடு முழு வதும் வெங்காய விலை உயர் விற்கு எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகிறன. இதன் ஒருபகு தியாக கோவையில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பார்க்வீதி மாதர் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா தலைமை தாங்கினார். இதில் பெண்கள் வெங்காயத்தை மாலையாக அணிந்தும், சீர்வரிசைபோல் தட்டு்களில் ஏந்தியும், விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை திறந்து வியாபாரம் செய்யும் எடப்பாடி அரசே, வெங்காயத்தை வியாபாரம் செய்ய முடிவெடு, மோடி அரசே வெங்காய விலையை பார்த்தாயா, தாலிக்கு தங்கமும் இல்லை, தாளிக்க வெங் காயமும் இல்லை’ என்கிற முழக் கங்களை எழுப்பினர். இதனை யடுத்து சாலையின் நடுவில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு வட்டமாக அமர்ந்து அர சின் இயலாமை குறித்து ஒப்பாரி பாடல்களை பாடினர். இப்போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப் பினர்கள் ராஜலட்சுமி, சுதா மற்றும் நிர்வாகிகள் சாந்தா, சாமுண்டீஸ்வரி, வனஜாநடரா ஜன், பங்கஜவல்லி, உமா உள் ளிட்ட ஏராளமான மாதர் சங்கத் தினர் பங்கேற்றனர். மாதர் சங்கத் தினரின் இப்போராட்டம் அ பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.