பென்னாகரம் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள் ளது. இங்கு சுமார் 25 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பேரூராட்சியை பொறுத்த வரையில் சிறு தொழில்கள் மட்டுமே அதிகம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக பெட்டி கடை, மளிகை கடை, துணிக்கடை, மின்சாதன கடைகள் போன்றவைகள் மட் டுமே அதிகமாக நிறைந்து காண ப்படுகிற ஒரு நகரமாகும். பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும் பாலான கிராமங்களில் மைய நகரமாக பென்னாகரம் பேரூ ராட்சி இருந்து வருகிறது. பேரூ ராட்சி பகுதியில் தான் பத்திரப் பதிவு அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் துறை மாவட்ட உதவி கண் காணிப்பாளர் அலுவலகம் உள் ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மற்றும் மருத் துவமனைகள் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாதாள சாக் கடை திட்டத்திற்காக நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் குழி தோண்டப் பட்டது. மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப் பதற்கும் குழிகள் தோண்டப்பட் டது. குழிகளை மூடினார்கள். தவிர இதுவரை எந்த சாலையும் முறையாக போடவில்லை. இத னால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படு கின்றனர். மேலும் மழைக்காலங் களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. சேறும் சகதியு மாக அதிலேயே நடந்து செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி யில் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகரத்தில் உள்ள அனைத்து சாலை களும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பென்னாகரம் பேரூராட்சி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து பேரூராட்சி அதி காரிகளிடம் விளக்கம் கேட்கை யில், உண்மைதாங்க எங்களுக்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக் குது. இப்பதான் ஒரு ரோடுக்கு ஆணை வந்து ரூ.70 லட்சத்தில் ஒரு சாலை போட்டோம். இப்போது 45 லட்ச ரூபாயில் சுண்ணாம் புக்காரத் தெரு சாலை டெண்டர் விட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து சாலைகளையும் சரிசெய்ய 6 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். - (ந.நி)