tamilnadu

img

அதிகாரிகள் மெத்தனத்தால் கவுண்டையன்வலசில் தொடரும் மணல் திருட்டு

தாராபுரம், ஆக. 4 - தாராபுரம் அடுத்த கவுண்டையன் வலசில் அதிகாரிகள் மெத்தனத்தால் தொடர்ந்து மணல் திருட்டு நடை பெற்று வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கவுண்டையன்வலசில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சார் ஆட்சியர் ஆய்வு செய்து அமராவதி ஆற்றுப்படுகையில் வழித்தடங் களை மணல் திருட்டிற்குப் பயன் படுத்தக்கூடாது என விவசாயிகளி டம் எழுதி வாங்கப்பட்டது. இந் நிலையில் மீண்டும் அப்பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் மணல் திருடுவது தொடர்கதையாக உள் ளது.  கவுண்டையன் வலசு, கரையூர், மருதகவுண்டன்வலசு, ஆலாம் பாளையம், ஆண்டிபாளையம், சாலரப்பட்டி, சீரங்ககவுண்டன் புதூர், நல்லாம்பாளையம் மற்றும் பொன்னிவாடி பகுதிகளுக்கு கவுண் டையன்வலசு அமராவதி ஆற்றுப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீர் உறிஞ்சு கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

நீர் உறிஞ்சு பகுதியை சுற்றியுள்ள பகுதியில் மணல் முழுவதுமாக அள்ளப்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள் ளது. ஏற்கனவே தினசரி வழங்கிக் கொண்டிருந்த குடிநீர் 15 நாட்க ளுக்கு ஒருமுறை பகுதியளவு வழங் குவது நடைமுறையில் உள்ளது.   இந்நிலையில், மணல் திருட்டைத் தடுப்பதற்காக சார் ஆட்சியர், காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்துள்ளார். இக்குழு வினர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார்கள் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இக்குழுவினர் எங்கும் ஆய்வை மேற்கொண்டு மணல்திருட் டில் ஈடுபட்ட வாகனங்களை பறி முதல் செய்யவில்லை. அதிகாரி களின் மெத்தனமான நடவடிக்கை யில் மணல் திருட்டுக்கு உடந்தையாக உள்ளதாக சமுக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் அந்தப்பகுதி பாலைவன மாக மாறி கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விவசாயம் முற்றி லும் பாதிக்கப்படும் அபாயம் உள் ளது.