tamilnadu

img

லாரிகள் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

கோவை, மே 14-கோவையில் மேம்பால தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு பழங்கள் ஏற்றிய லாரி, செவ்வாயன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் இருகூர் மேம்பாலம் வழியாக லாரி வந்த போது, எதிரில் கேரளாவில் இருந்துவீட்டு உபயோக பொருட்களை ஏற்றிய லாரி ஒன்று வந்தது. மேம்பாலத்தின் ஓரிடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில், இரண்டு லாரிகளும் நிலைதடுமாறி மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, 60 அடி பள்ளத்தில் உருண்டு கீழே இருந்த ரயில் தண்டவாளத்தின் அருகே தனித்தனியாக விழுந்தன. இதில், வீட்டு பொருட்களை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரான ஆலப்புழையை சேர்ந்த ஜெயாஸ்(38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு லாரியின் ஓட்டுநரான சேலத்தை சேர்ந்த ராகவேந்திரா(23) படுகாயமடைந்தார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த ராகவேந்திராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.