tamilnadu

img

நிழல்தரா நிழற்குடை: பயணிகள் அவதி

அவிநாசி, ஜூலை 9- அவிநாசி புதிய பேருந்து  நிலையம் அருகில் இரு புறமும் நிழற்குடை அமைக் கப்பட்டுள்ளது. ஆனால் நிழற்குடையில் தனி யார் விளம்பரப்படுத்தவே  முன்னுரிமை அளிக்கப்பட் டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.   அவிநாசி புதிய பேருந்து  நிலையம் அருகில் நிழற் குடை இல்லாமல் இருந்தது.  இதையடுத்து பொது மக்கள் நிழற்குடை அமைக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்து வந் தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் இருபுறமும் அழகிய  தோற்றதுடன் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கையில், நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் முழுமையாக இல்லை.  ஆனால் நிழற்குடை  மேல் கூரை அரைகுறையாக  அமைக்கப் பட்டு உள்ளது. நகைக்கடை விளம்ப ரங்களே உள்ளன. இதனால் பயணிகள் வெயிலில் நிற்கின்றனர். மேலும் இருக்கை கள் போதுமானதாக இல்லை என தெரி வித்தனர்.  இதுகுறித்து  பேரூராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, தனியார் நகைக் கடை உரிமையாளரும், சமூக நல அமைப்பும் சேர்ந்து பேரூராட்சியிடம் அனுமதிபெற்ற பிறகே நிழல் குடை அமைக்கப்பட்டது. அதேநேரம், நிழற் குடை வடிவங்கள் அமைப்பது அவர்களின் விருப்பமாக இருக்கின்றது. இதில் தலையீடு செய்வது சரியாக இருக்காது என கூறினார். இருப்பினும் பொதுமக்க ளுக்கு நிழற்குடையில் நிழல் கிடைக்க வில்லை என்றால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய நிழற்குடை கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.