tamilnadu

img

நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வணிக பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்ட குடிநீர் பறிமுதல்

தாராபுரம், ஆக. 19 - நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தி லிருந்து வணிக பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்ட குடிநீர் கேன்களை நக ராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை மேற் கொண்டனர். தாராபுரம் பொதுமக்கள் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரை அதிக விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில்  வாங்கி வருகின்றனர்.  தாராபுரம் நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங் களை (ஆர்ஓ பிளாண்ட்டு) ஜின்னா மைதானம் மற்றும் கண்ணன் நகரில் தனியார் பங்களிப்புடன் நிறுவி செயல்படுத்தி வருகிறது. இந்த பிளாண்டுகளில் டோக்கன் பெற்று ஒருலிட்டர் தண்ணீர் 1 ரூபாய்க்கும், 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்க்கும் பொதுமக்கள் எடுத்து செல்கின்றனர். இந்த டோக்கன்கள் அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் விற் பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் கண்ணன் நகரில் உள்ள (ஆர்ஒ பிளாண்டில்) தண் ணீர் விற்பனை செய்யும் வியாபாரி கள் வாகனத்தில் தண்ணீர் கேன்களை டோக்கன் மூலம் நிரப்பிக் கொண்டி ருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர். ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று டோக்கன் களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.