tamilnadu

பாலாற்றை ஒட்டச் சுரண்டும் மணல் மாபியா கும்பல்

திருப்பூர், ஜூலை 30 – உடுமலை தாலுகாவில் பாலாற்றை ஒட்டச் சுரண்டும் மணல் மாபியா கும் பல் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமிக்கு திங்களன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா கரட்டு மடம், ராவணாபுரம் மற்றும் தேவனூர் புதூர் உள்ளிட்ட கிராமங்களின் வழி யாக செல்லும் பாலாற்றையொட்டி முறைகேடாக மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து அன்றா டம் கேரளா மற்றும் கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு டிப்பர் லாரிக ளில் லோடு,லோடாக மணல் கடத்தப் படுகிறது என்று செய்திகள் தொடர்ந்து வந்தன.  ஆறு மற்றும் அதையொட்டிய பகுதி களில் மணல் எடுப்பதால் ஆற்றிலுள்ள குடிநீர் கிணறுகள் மற்றும் ஆற்றை யொட்டிய பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் பாதித்து தென்னை மரங்கள் காய்ந்துவிடும் என்று அப்பகுதி விவ சாயிகளும் கூறினர். எங்களால் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. எனவே விவசாய சங்கத்தின் மூலம் உதவி செய்யுங்கள் என்று கோரினர்.  இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அமைச்சர்களே மணல் கடத்துவதற்கு உடந்தையாக இருப்பதாகவும், தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், வட்ட நிர்வாகம் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் செய்தி வந்திருந்தது. அதேதினம் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியில், மூன்று மாதத்திற்கு முன்னால் எடுத்தது என்றும், புதிதாக மணல் கடத்தல் எதுவும் இல்லையென் றும் வருவாய் ஆய்வாளரை ஆய்வு  செய்யச் சொல்வதாகவும் வட்டாட்சியர் பி.தங்கவேல் தெரிவித்திருந்தார். வேறொரு பத்திரிகையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ரகசியமாக நோட்ட மிட்டு மணல் கடத்துவதை தடுத்ததா கவும், கடந்த ஜூலை 25 ஆம் தேதி மாலையில் தகவல் வந்ததாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சோதனையிட்டதாகவும் அந்த ஆய்வில் எதுவும்  நடக்கவில்லை என்றும் ஒரு செய்தி வெளிவந்தது. 

இச்செய்திகளின் உண்மைத் தன்மைகளை அறிவதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன், மாவட்டத் துணைச் செயலா ளர் எ.பாலதண்டபாணி, உடுக்கம் பாளையம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும் மாவட்ட துணைச் செய லாளருமான எஸ்.பரமசிவம், உடுமலை ஒன்றியத் தலைவர் எ.ராஜகோபால், ஒன்றியத் துணைச் செயலாளர் வல்ல குண்டாபுரம் எஸ்.பரமசிவம், பாலாறு பகுதி விவசாயிகள் மாடலோகேஸ்வ ரன், சமூக ஆர்வலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் பாலாறுப் பகுதிக்குச் சென்று பார்த்தோம். இராவணாபுரம் கிராமத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் தார் சாலைக்கு மேற்குப் பக்கமும், பாலாற்றுக்குத் தெற்குப் பக்கமும் ஆற்றையொட்டியே ஒரு மணல் குவாரி  செயல்படுவது தெரியவந்தது. நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுமார்  5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 50 அடி ஆழத்திற்கு மணல் முழுமையாக எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந் தது. அதோடு 50 அடி ஆழத்திற்கு குழியைத் தோண்டி கீழேயிருந்து மணலையெடுத்து  நூற்றுக்கணக்கான டிப்பர் லாரி லோடு மணல் குவித்து வைத்திருந்தனர். கனரக வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டு  இருந்தது. முறைகேடான குவாரியிலி ருந்து வாகனங்களில் மணல் ஏற்றி சென்றதற்கான அடையாளங்களும் இருந்தன. அங்கு மணல் எடுப்பதற்கான இயந்திரங்கள் தள்ளி மறைவாக நிறுத்தப்பட்டிருந்தன. நாங்கள் உள்ளே செல்லும்போது அங்கு ஒன்பது பேர் இருந்தனர்.  நாங்கள் மணல் எடுத்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந் தோம். அப்போது அங்கிருந்தவர்கள் எங்களுக்கு அருகில் வந்தனர். இது எங்கள் சொந்தப் பட்டா நிலம் என்று  ஒருவர் சொன்னார்.  நாங்கள் ஆறு போல் தெரிகிறதே என்று சொன் னோம். 

அப்போது அங்கிருந்த வெளிமாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை கடுமையான வார்த்தைகளில் பேசி  மிரட்டினர். நாங்கள் எதுவும் பேசாமல் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மூங்கில் படலை வைத்து வழியை அடைத்துவிட்டனர். நாங்கள் சிரமப் பட்டு வெளியே வந்தோம். அதன்பின் பாலாற்றின் வடபுறம் வந்தபோது அங்கிருந்த விவசாயிகள் எங்களைச் சந்தித்து பகலில் ஒன்றும் செய்வ தில்லை. இரவில் மணலை கடத்து கின்றனர் என்று மிகுந்த அச்சத்துடன் தெரிவித்தனர். மேலும், பாலாற்றையொட்டி ஆங் காங்கே மணல் எடுப்பதும், பிரச்சனை கள் ஏற்படுவதும், சிறிதுகாலம் நிறுத்தி மீண்டும் வேறொரு இடத்தில் மணல் எடுப்பதும்  கடந்த ஓராண்டாக நடந்து வந்துள்ளது தெரியவந்தது. பாலாறு, உடுமலைபேட்டை வட்டத்தில் திருமூர்த்திமலையில் துவங்கி சுமார் 30 கி.மீ பயணித்து ஆழியாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் பெறுவதுடன், 10க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. பாலாற்றையொட்டி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் தென்னை மரங்கள், பாக்கு மரங்கள், மாமரங்கள் உள்ளிட்ட பசுமையாக காட்சியளித்துவரும் பகுதியாகும்.  இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால் பாலாற்றிலும் தண்ணீர் இல்லாத நிலையில் நீரை சேமித்து வைக்கும் ஆற்று மணலை உயர் நீதி மன்ற தீர்ப்புகளுக்கு மாறாக மாஃபியா கும்பல் மணலை கொள்ளை யிட்டு வருகிறது. பல அடி ஆழத்திற்கு  மணலைத் தோண்டி எடுத்துள்ளனர். மணலைத் தோண்டி எடுத்துள்ளவர்கள் மீது சட்டரீதியாக எவ்வித  நடவடிக்கை யும் எடுக்காமல் அதிகாரிகள் கடமை தவறியுள்ளனர். எனவே, உடனடியாக மணல் கொள்ளையை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் எவ்வித அனுமதி இன்றி மேற்கண்ட இடத்தில் மணலைச் சுரண்டி எடுத்த மணல் மாஃபியாக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக இம்மனுவில் கூறியுள்ளனர்.