tamilnadu

குற்றத்தை தடுப்பதே நோக்கம் - மாதர் சங்கம் அறிக்கை

கோவை, ஜூன் 27–  அதிகரித்துவரும் பெண்கள் மீதான குற்றங்களை தடுப்பதும், காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தொடர்ந்து மேற்கொள்வோம் என மாதர் சங்கம் அறிக்கை வெளி யிட்டுள்ளது.  இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், உடனுக்குடன் களத்தில் இறங்கி சமூக விரோதிகளை மாதர் சங்கம் அம்பலப்படுத்தி வருகிறது.

இதன்ஒருபகுதியாக கோவை நவஇந்தியா பகுதியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட விடுதியின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்களன்று மாதர் சங்கம் அளித்த புகாரின் மீது கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சட்டவிரோதமாக செயல்பட்டதை உறுதி செய்து கட்டிடத்திற்கு சீல்வைத்து நடவடிக்கை எடுத் துள்ளார். இதனை சில விஷமிகள் மாதர் சங்கம் கலாச் சார காவலர்களாக செயல்படுவதாக செயலின் உண்மைத் தன்மையை அறியாமல் திரித்து கூறிவருகின்றனர்.  பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட பெண்கள், குழந்தை கள் மீதான  பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டி ருக்கும் பின்னணியில், நவஇந்தியா பகுதியில் உள்ள  விடுதியை சமூக விரோதிகளும், குற்றச்செயல் புரிபவர்க ளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என  குடியிருப்போர் நல சங்கத்தினரும், அப்பகுதி மக்களும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில்தான் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு புகார் அளித்தோம்.

ஆனால், கலாச்சார காவலர்களாக மாதர் சங்கம் நடந்து கொண்டது என ஒரு பகுதியினர்  குற்றம் சாட்டுகிறார்கள்.  உண்மையில் வயது வந்த ஆணும், பெண்ணும் சட்டத்திற்கு உட்பட்டு அவர்களது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்வது குற்றம் என்ற கண்ணோட்டம் ஒரு போதும் ஜனநாயக மாதர் சங்கத்துக்கு இருந்தது கிடை யாது. அதே சமயம் பல்வேறு பொய்களையும், மாய  பிம்பங்களையும் கட்டமைத்து தங்களது குற்ற வலை யில்  அப்பாவிப் பெண்களை சிக்க வைப்பதை  வேறுபடுத் தியே பார்க்க வேண்டியிருக்கிறது. களத்தில் மதவெறி சக்திகளும், சாதி வெறி சக்திகளும் கலாச்சார காவலர்க ளாக தாக்குதலில் ஈடுபடும் போது அவற்றை எதிர்ப்பதில் ஜனநாயக மாதர் சங்கம் எப்போதும் முன்வரிசையில் இருந்திருக்கிறது. இனிமேலும் இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.