tamilnadu

img

சீர்குலைக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீர்செய்ய ஓய்வூதியர்கள் மாநாடு கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 11- குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகளை உட னடியாக சீர் செய்ய வேண்டும்; ஓய்வூதி யர் சங்க கும்பகோணம் வட்ட மாநாட் டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மூன்றாவது வட்ட மாநாடு கும்பகோணத்தில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜ கோபாலன் சங்க கொடியை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். வட்டத் தலைவர் துரைராஜ் தலைமையேற் றார். துணைத் தலைவர் சி.சண்முகம் அஞ்சலி தீர்மானத்தையும், வட்டச் செயலாளர் பழ.அன்புமணி வேலை அறிக்கையையும், பொருளாளர் ராமமூர்த்தி வரவு செலவு அறிக்கை யும் வாசித்தனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீ.பக்கிரிசாமி அனைவரையும் வர வேற்றார். மாவட்டத் தலைவர் ஆர்.கலி யமூர்த்தி துவக்க உரை ஆற்றினார். மேனாள் மாநில தலைவர் எஸ் சுடலை பாண்டி சிறப்புரையாற்றினார். வட்ட துணைத் தலைவர் டி கண்ணன் நன்றி கூறினார். மாநாட்டில் வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு சால்வை அணி வித்து கௌரவிக்கப்பட்டன. மாநாட்டில் சிறப்பு அழைப்பா ளர்களாக கும்பகோணம் சூரிய நிதி லிட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், சார் நிலை கருவூல அதிகாரிகள், சகோ தர சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரி கள், ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்டத் தலைவராக துரைராஜ், துணைத் தலைவர்களாக தனசேகரன், சி.சண்முகம், எஸ்.ஜே.கமால், செய லாளராக பழ.அன்புமணி, இணைச் செயலாளர்களாக டி.ராஜகோபாலன், எம்.எஸ்.கலைச்செல்வி, பொரு ளாளராக ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினராக கீ.பக்கிரிசாமி, தணிக்கையாளர்களாக ரத்தினசபா பதி, மோகன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.