tamilnadu

img

அரசு பள்ளியில் திறந்த வெளியில் சமைக்கும் அவலம்

அவிநாசி, ஆக. 28- அவிநாசி அருகே திருமலை கவுண்டம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நவீன வசதிகளுடன் சமையல் கூடம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.  குட்டகம், ஊராட்சியில் திருமலை கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு மதிய உணவு சமைப்பதற் கான சமையல் கூடம் என்பது மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. மேலும், விறகு அடுப்பில் சமைக்க வேண் டிய நிலை உள்ளது.  அவிநாசி ஒன்றியத்தில் சில அரசுப்  பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தரமான சமையல் கூடத்தில் எரிவாயு  சிலிண்டர் அடுப்பில் சமைத்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் சமையல் கூடம் என்பது மிக வும் மோசமாக உள்ளது.  இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன் னணி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், 2017 ஆம் ஆண்டு இப்பள் ளிக்கு சுற்றுச் சுவர், சமையல் கூடம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பள்ளிக்கு சுற்றுச் சுவர், சமையல் கூடம், சிலிண்டர் அடுப்பு போன் றவை ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்தார். 

;