கோவை, டிச. 9- கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத் தில் கோவில் யானைகளுக்கான நல வாழ்வு புத்துணர்வு முகாம் துவக்குவ தற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலையில் நான் காண்டுகளாக முகாம் நடைபெற்று வந்த நிலையில், இது மாற்றப்பட்டு கடந்த ஆறாண்டுகளாக தொடர்ச்சியாக மேட்டுப் பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏழாம் ஆண் டாக இவ்வாண்டும் இங்கேயே யானைகள் நலவாழ்வு முகாம் நடத்த தமிழக அரசு முடி வெடுத்துள்ளது. இதனையடுத்து வழக்கமாக முகாம் நடைபெறும் தேக்கம்பட்டி பவானியாற்று கரையோரப் பகுதியினை சீரமைக்கும் பணியை கடந்த மாதம் 29 ம் தேதியே துவங் கியது. ஆனால் கடந்த இரண்டாம் தேதிஅதி காலை கனமழை காரணமாக அருகிலிருந்த சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் பதி னேழு பேர் பலியானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முகாம் அமைக்கும் பணி கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் யானை களுக்கான முகாம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் துவக்கப்பட்டுள்ளது.