tamilnadu

வேளாண் கல்லூரியில் பொன்விழா சந்திப்பு 

 கோவை, ஜூலை 20- 50 வருடங்களுக்கு பிறகு கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சந்தித்தனர். 1969 ம் ஆண்டு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளநிலை வேளாண்மை பயின்ற மாணவ, மாணவிகள் 2019 ம் ஆண்டு ஜூலை 19 அன்று பல்கலைக் கழக வளாகத்தில் சந்தித்து கல்லூரி பருவ நாட்களை நினைவு கூர்ந்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் சி.ராமசாமி, பல் கலைக்கழக முன்னாள் முதன்மையர்கள் மற்றும் இயக்கு னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் பங்கேற்றார். இந்நிகழ்வின் இறுதியில் அனை வரும் குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.