tamilnadu

img

மோசடி சிட்பண்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி

கோவை, ஜூன் 17- மோசடியில் ஈடுபட்ட சிட்பண்ட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் இயங்கி வரும் முல்லை ஜூவல்லரி சிட்பண்ட் நிறுவனத்தை குறிஞ்சி என்பவர் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தினர் தங்க ளது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்புப் பணம் தருவதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமா னோர் பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், அறிவித்தபடி முதலீடு செய்தவர்க ளுக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவ னத்தை முற்றுகையிட்டு அங்கு பணிபுரி யும் பெண் ஊழியர்களை சிறைபடுத்தினர். அப்போது தலையிட்டு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.  இந்நிலையில், 1,000க்கும் மேற்பட் டோர் முல்லை ஜூவல்லரி சிட்பண்ட்டில் முதலீடு செய்து உள்ளதாகவும், 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியவர்கள், பணத்தைத் திருப் பிக் கேட்டபோது தனக்கு அமைச்சரை நன்கு தெரியும் எனவும், அரசியல் பின்பு லம் இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய  முடியாது என கூறி ஆட்களை வைத்து மிரட்டுவதாகக்கூறி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிஞ்சி சிட் பண்ட் நிறுவனம் உரிமையாளரை கைது செய்து பணத்தை திரும்ப கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என முழக்க மிட்ட னர். இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, இந்நிறுவன அலுவல கத்தை தற்போதைய கல்வி அமைச்சர் செங் கோட்டையன் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.