tamilnadu

img

நிலப் பத்திரத்தை ஆட்சியர் அலுவலகத்தில் வீசியெறிந்த விவசாயி

திருப்பூர், ஆக. 26 - தனது சொந்த விவசாய  நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரி வித்து விவசாயி ஒருவர் தனது நிலத்தின் பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசியெறிந்து விட்டு மனக்குமுற லுடன் வெளியேறினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் சிவன்மலை  ஊராட்சி அரசம்பாளையம் அருகே ராயர்வலசு கிராமத் தைச் சேர்ந்தவர் ஆர்.பி.கந்தசாமி. இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில், சிவன்மலை கிராமம் ரீசர்வே எண் 505/1, 739/4, 473/3ஏ காலைகளில் உயர்மின் கோபுரம் கொண்டு சென்று, உயர் மின்னழுத்த பாதை அமைப் பது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி நானும், காலஞ்சென்ற எனது தந்தை பழனிசாமியும் சேர்ந்து மின் கழக செயற்பொறியாளர் மற்றும் தங்களிடம் (மாவட்ட ஆட் சியர்) ஆட்சேபணை மனு கொடுத்தோம். அத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தி லும் வழக்கு தாக்கல் செய்தோம்.  இதில் 4 வாரத்தில் ஆட்சியர் விசாரித்து ஆணை பிறப்பிக் குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன்படி தாங்கள் எனது ஆட்சேபனையை விசா ரிக்கவில்லை. காலம் கடந்து  ஆகஸ்ட் 2ஆம் தேதி விசார ணைக்கு அழைத்துவிட்டு தாங்கள் என்னிடம் விசாரிக்காமல், ஒரு சட்ட விரோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாக கண்டித்தும் தங்களிடம் என் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை வேதனையோடும், மிகுந்த மன வருத்தத்துடனும் ஒப்படைக்கி றேன் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தான் கொண்டு  வந்திருந்த தனது விவசாய  நிலத் தின் அசல் ஆவணங்களை ஆட்சி யரக குறை தீர்க் கூட்ட அரங்கில் உள்ள மேசையில் எறிந்துவிட்டு கண்ணீருடன் வெளியேறிச் சென் றார். இதையடுத்து அங்கிருந்த உயர் மின்கோபுர எதிர்ப்புக் கூட் டியக்க விவசாயிகள் அவரை ஆறுதல் படுத்தினர். மேலும் வீசியெறிந்த நில ஆவணங்களை  அவரிடம் எடுத்துக் கொடுத்து சமா தானம் செய்து வைத்தனர்.