tamilnadu

img

கோவையில் வரலாற்று காலத்திற்கு முற்பட்ட குறியீடுகள் கண்டுபிடிப்பு

கோவை, ஆக.24- கோவையில் வரலாற்று காலத் திற்கு முற்பட்ட குறியீடுகள் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை பி.எஸ்.ஜி.கலை மற் றும் அறிவியல் கல்லூரி வளா கத்தில் தொல்லியல் கழகக் கருத்த ரங்கு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல தொல்லியல் கண்டு பிடிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் கோவை காலிமங்களத்தில் கிடைக்கப்பெற்ற இரட்டைக் குறியீடுகள் குறித்து பேராசிரி யர் டாக்டர் ச.இரவி தெரிவித்த தாவது, கோவை ஆலந்துறைக்கு தெற்கே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காலிமங்களம் என்ற ஊர் உள்ளது. அங்கு பெருங்கற் காலப் பண்பாட்டுப் பொருட்கள் அதிக அளவில் மேற்பரப்பாய்வில் கண்டறியப்ட்டன. குறிப்பாக. சுடு மணல் ஓட்டில் இரண்டு குறியீடுகள் இருந்ததைக் கண்டறியப்பட்டது.  இதில் ஒன்று செடி போன்றது. மற்றொன்று பம்பரம் சுழல்வது போன்றது. இரண்டு குறியீடுகளும் ஒரே சுடுமண் ஓட்டில் கிடைத் திருப்பது சிறப்புக்குரியது. கொங்கு மண்டலத்திற்கேயுரிய வண்ணப் பூச்சுப் பூசப்பெற்ற சிவப்புநிற வளைகோடுகளுக்கு மத்தியில் இக்குறியீடுகள் பொறிக்கப்பட் டுள்ளன. இவை இரண்டு இனக் குழுக்களின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றையடுத்து ஒன்று காணப்படுவதால் நட்புறவு கொண்ட இரு இனங்களை அறிந்து கொள்வதாக இருக்கிறது. இதன் காலம் 2500 ஆண்டாகும்.  பெருங்கற்காலப் பண்பாட்டில் இனக் குழுக்களாக வாழ்ந்த காலத் தில் குழுக்கள் தங்களை அடை யாளப்படுத்திக் கொள்ள பறவை கள், தாவரங்கள் போன்றவற்றின் பெயர்களை வைத்துக்கொள்வர். அக்காலத்தில் சாதிகள் கிடையாது. இயற்கைக் குகையில் வாழ்ந்த இனக் குழு மக்கள் நாகரிக வாழ்க் கையை நோக்கி வரலாற்றுக் காலத்தில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது அவர்கள் சுடுமண் கலை களைக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினர். அவற்றிலே எழுத் துத் தோன்றுவதற்கு முன்பு தங்கள் குழுக்களின் அடையாளங்களாக குறியீடுகளை அமைத்துக் கொண் டனர். இனக்குழு மாந்தர்களின் குழுக் குறியீடுகள் கிடைத்திருப் பதால் இப்பகுதியில் 2500 ஆண்டு களுக்கு முன்பே ஒரே இரத்த உறவு உடைய குழு மாந்தர்கள் வாழ்ந்த தற்குரிய முக்கியத் தரவாக இப் குழுகுறியீடு கிடைத்திருப்பது சிறப்புக்குரியதாகக் கருதப்படு கிறது. இவ்வாறு பேராசிரியர் ச.இரவி தெரிவித்துள்ளார்.