குன்னூர், ஜூலை 14- நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.26 ஆம் தேதி உதகையில் தர்ணா போராட்டத்திற்கு சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது. இந்திய தொழிற்சங்க மைய நீலகிரி மாவட்ட 9ஆவது மாநாடு குன்னூரில் ஐஎம்ஏ மகாலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.சுந்தரம் தலைமை வகித்தார். மூத்த தோழர் தேவராஜ் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். வர வேற்புக்குழு தலைவர் ஏ.சண்முகம் வரவேற்றார். மாநில துணை தலை வர் எஸ்.ராஜேந்திரன் துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை வேலை அறிக்கை சமர்பித்தார். பொருளாளர் ஆர்.ரமேஷ் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ் ணன், கார்டைட் கம்பெனி தொழிலா ளர் சங்கம் தலைவர் அசோக் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசி னர். மாநில செயலாளர் கே.சி.கோபி குமார் நிறைவுரையாற்றினார். ஆசா பணியாளர்களுக்கு 5 மாதங் களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பெருந்தி ரள் முறையீட்டில் ஈடுபடுவது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி வலுவான போராட்டம் நடத்துவது. நீலகிரி மாவட்ட தொழிலாளர்களின் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26ஆம் தேதி உதகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய மாவட்ட தலைவராக கே.சுந்தரம், செயலாளராக ஆர்.ரமேஷ், பொருளாளராக ஏ.நவீன் சந்திரன், துணை தலைவர்களாக ஜே.ஆல்தொரை, ஆர்.பத்ரி, ஏ.சண் முகம், எஸ்.ரமேஷ், இந்திராணி, துணை செயலாளர்களாக எம்.ஆர். சுரேஷ், கணேசன், ரபீக், லதா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இறு தியாக முகமது ரபீக் நன்றி கூறினார். முன்னதாக சனியன்று நடை பெற்ற பொது மாநாட்டில் தோழர் ராமன், எல்.தியாகராஜன் ஆகியோர் நினைவாக எடுத்துவரப்பட்ட கொடி மற்றும் கயிறு பெறும் நிகழ்ச்சி மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.