tamilnadu

img

ஆதிதிராவிட நல விடுதி மாணவிகளை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த கொடுமை

அவிநாசி, ஆக. 1 - அவிநாசி அருகே ஆதிதிராவிட பெண் கள் நல விடுதியில் நீர்த்தேக்கத் தொட்டியை  சுத்தம் செய்வதற்கு, அங்கு தங்கியுள்ள மாணவிகளை வேலை வாங்கிய விடுதி கண் காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வற்பு றுத்தி உள்ளது. அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  11ஆம் வகுப்பு படிக்கும் உதகை யைச் சேர்ந்த லாவண்யா, 10ஆம் வகுப்பு படிக்கும் கடலூரைச் சேர்ந்த அம்சவேணி ஆகிய மாணவிகள் இங்குள்ள ஆதிதிராவிட பெண்கள் நல விடுதியில் தங்கியுள்ளனர். ஜூலை 30ஆம் தேதியன்று  ஆதிதிரா விடர் பெண்கள் நல விடுதியின் கண் காணிப்பாளர்  இந்த இருமாணவிகளையும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யச் சொல்லி இருக்கிறார். இதையடுத்து மாண விகளும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரம் புகைப்படத்துடன் வெளி வந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவிநாசி ஒன்றியக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றியத் தலைவர் வி.பி.முரு கேஷ் கூறுகையில், மாணவிகளை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத் திருப்பது கண்டனத்திற்குரியது. அனைத்து விடுதிகளிலும் துப்புரவு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை ஊழியர்கள் மூலம்  செய்ய வேண்டும். விடுதியில் தங்கியிருக் கும் மாணவ, மாணவிகளை இதுபோன்ற பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று  விதிமுறை உள்ளது. குறிப்பிட்ட பணிகளை குறிப்பிட்ட சாதியினர் செய்ய வேண்டும் என்ற சாதிய மனநிலையில் தான் இது போன்ற செயல்களில் சில அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை இருக்குமானால், துறைரீதியாக உரிய ஏற்பாடு செய்து பணியாளர்களை நியமித்து பணிகளை செய்ய வேண்டும். ஆனால் விதி முறைகளை மீறி மாணவிகளை தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்ய வைத்த விடுதி  கண்காணிப்பாளர் மீது மாவட்ட கல்வி  நிர்வாகம்  விசாரணை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.  மேலும் பல்வேறு அமைப்புகளும் இச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித் துள்ளன. இந்த சம்பவம் குறித்து அவிநாசி  கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, உயர்மட்ட  அதிகாரிகளைக் கேட்கவும் என்று அலட்சிய மாக பதிலளித்தனர்.