கோவை, மே 10-கோவை பிரிக்கால் நிறுவனம் 294 தொழிலாளர்களை பணியிடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கும்படிஅரசாணை பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரிக்கால் நிறுவனத்தில் ஏஐசிசிடியூ அமைப்பைச் சேர்ந்த கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் சுமார்600க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் புதிய ஊதிய ஒப்பந்தம் கோரிகடந்த 21.8.18ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட 144 தொழிலாளர்களை ஆலைக்குள் விட நிர்வாகம்மறுத்தது. இதனைக் கண்டித்துபோராட்டம் நடைபெற்ற நிலையில், தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டு ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர். இந்நிலையில், பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களில் 302பேரை உத்தரகாண்ட்,மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்றமாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து பிரிக்கால் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.இடமாற்றம் செய்யப்பட்டதில் 8 தொழிலாளர்கள் மட்டும் பணியில் சேர்ந்த நிலையில், மற்ற 294 பேர் எந்த பதிலும் அளிக்காததால் அவர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த பிப்ரவரி மாதம் பிரிக்கால் நிறுவனம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொழிற்சங்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் தொழிலாளர்களின் பணி நீக்க உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், பணியிடமாறுதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பணியிட மாறுதலை நிறுத்திவைக்கும்படி நிர்வாகத்துக்கு தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக சங்கத்தின்மாநில செயலரும், உயர் நீதிமன்றவழக்குரைஞருமான கே.பாரதி,தொழிற்சங்க நிர்வாகிகள் பி.நடராஜன், எம்.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் வெள்ளியன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுப்படி தமிழக அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை 3.05.2019 தேதியிட்டு, தொழிற் தகராறுகள் சட்டம் 1947ன் 10 (1)பிரிவின் கீழ்அரசாணை 221ம், 10பி பிரிவின் கீழ் அரசாணை 222 ஆகியவற்றை பிறப்பித்துள்ளது. மேலும் பணியிட மாறுதல்நியாயமானதா என்ற வழக்கின்விசாரணை முடியும் வரை, பிரிக்கால் நிறுவனம் பிறப்பித்த பணியிட மாறுதல் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்என்றும் அரசு ஆணையிட்டுள்ளது. எனவே தற்போதைய அரசாணையை பிரிக்கால் நிறுவனம்ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய பிளான்ட் 1, பிளான்ட் 3 ல் பணியமர்த்த தேவையான நடவடிக்கைஎடுக்க வேண்டும். மேலும், நீதிமன்றத் தீர்ப்பின்படி போடப்பட்டுள்ள அரசாணைகளை அமல்படுத்தும்படி சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.