tamilnadu

img

சிஐடியு சேலம் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

சேலம், ஜுன் 29-            இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) சேலம் மாவட்ட 12வது மாநாடு மேட்டூரில் எழுச்சியுடன் துவங்கியது. இந்திய தொழிற்சங்க மையத்தின் சேலம் மாவட்ட 12ஆவது மாநாடு மேட்டூரில் கே.பி.வரதராஜன் நினை வரங்கத்தில் சனியன்று துவங்கி யது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்ட துணை தலைவர் சி. கோவிந் தன் ஏற்றி வைத்தார். வரவேற்பு குழு தலைவர்  சி.கருப்பண்ணன் வர வேற்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் ஆர்.வைரமணி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். மாநில துணை பொதுச்செய லாளர் வி.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், மாவட்ட பொரு ளாளர் வி.இளங்கோ ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.  

முன்னதாக, வெண்மணி தியாகி கள் நினைவு ஜோதி சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் தலைவர் செம்பன் தலைமையில் மேட்டூர் பணிமனையில் இருந்து மாநாட்டு திடலுக்கு கொண்டுவரப் பட்டது. இதனை சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இதேபோல், மூத்த தொழிற்சங்க தலைவர் எம்.சீரங்கன் நினைவு ஜோதி மேட்டூர் தெர்மலில் இருந்து மேட்டூர் மின் பகிர்மான வட்ட கிளை செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் கொண்டு வரப்பட்டது. இதனை சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வைரமணி பெற்றுக்கொண்டார். இம்மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து பெண் கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாடு இரண்டாம் நாளாக ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில  குழு உறுப்பினர் எஸ்.கே.தியாக ராஜன் உள்ளிட்ட  தலைவர்கள் பங் கேற்று உரையாற்ற உள்ளனர். இம் மாநாட்டின் முடிவில் ஞாயிறன்று மாலை மேட்டூர் மாதா கோவில் முன் பிருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்கும் பேரணி துவங் குகிறது. இதைத்தொடர்ந்து காந்தி சிலை சதுரங்காடி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச் சிகள் நடைபெற உள்ளது.