tamilnadu

img

ஒகேனக்கல்லை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

எஸ்.செந்தில்குமார் எம்பி

தருமபுரி, டிச.15- ஒகேனக்கல்லை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்ற மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.செந்தில்குமார்  வேண்டு கோள் விடுத்தார்.  இதுகுறித்து மக்களவையில் அவர் பேசியதாவது, எனது தொகுதி யான தருமபுரியில் இயற்கை எழில் கொஞ்சும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது அழகான சுற்றுலா தலம் மட்டுமல்லாது, வனப்பு மிகுந்த ரம்மியமான பகு தியாகும். ஆனாலும், இது வகைப் படுத்தப்படாத சுற்றுலா மையமா கவே உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதை சர்வதேச சுற்றுலா தளமாக மத்திய அரசு மாற்ற வேண்டும். அத்துடன், அங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தற்போதைக்கு, அங்கு பரிசல் ஓட்டுனர்கள், மீன் சமைக்கும் சமையல்காரர்கள், எண்ணெய் மஜாஜ் செய்வோர் என 3 வகையான தொழில்கள்தான் நடைபெறுகின் றன.

ஆனாலும், கர்நாடக அணைக ளிலிருந்து தண்ணீரை திறந்து விடப்பட்டு, காவிரி ஆற்றில் அதிக ளவு வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இந்த தொழிலில் ஈடு படுவோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏறத்தாழ 4 முதல் 6 மாதங் களுக்கு, இவர்களின் தொழில்கள் பறிபோய், வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற் பாடுகள் செய்து தரும்படி, நீண்ட காலமாக  கோரிக்கை விடுத்து வரு கின்றனர். சீசன் இல்லாத காலங் களில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமாவது, சில நிபந்தனைகளு டன் கூடிய விதிமுறைகளுடன், பரி சல் ஓட்டுவதற்காவது அனுமதி தரும்படி கோரி வருகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காணும் விதமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒரு குழுவை அமைத்து, சீசன் அல்லாத காலங்களிலும், அங்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.  மேலும், அங்குள்ள வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவ தோடு, ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை சர்வதேச தரத்துக்கு சீரமைத்து தருவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் பேசினார்.