கோவையின் அடையாளம் முன்பு பஞ் சாலை என்றால், தற்போது சிறு குறு தொழில்கள். இத்தொழிலுக்கு மூல ஆதார மாய் இருப்பது வார்ப்பட தொழில் எனப்ப டும் பவுண்டரிகள். தொழில் நகரமான கோவையில் தொழில்துறை வட மாநில தொழிலாளர்களையே அதிகளவில் சார்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக, பவுண்டரி, கட்டிட வேலை, சிறு, குறு தொழில், செங் கல் சூளை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இதில் இரும் பை உருக்கி புதிய பொருட்களை உற்பத்தி செய்கிற கடினமான உழைப்பை செலுத்த வேண்டிய தொழிலாய் வார்ப்பட தொழில் உள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போ தைய ஊரடங்கால் வேதனையை சுமந்து கொண்டு தங்களின் ஊருக்கு கிளம்பிவிட்ட தால் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி யுள்ளது வார்ப்பட தொழில்.
கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கினால் இன்று வரை கோவையில் இருந்து சுமார் 20 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்க ளுக்கு சென்றுள்ளனர். போதிய ரயில் வசதி கள் ஏற்பாடு இல்லாததால் தற்போதும் நடை பயணம், சைக்கிள், லாரி, ஆம்னி பேருந்து என பல வழிகளிலும் வட மாநில தொழிலா ளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் வட மாநில தொழிலாளர்களை சார்ந்து இருந்த தொழில்களில் திறன்மிகு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. இதுகுறித்து, சிறுகுறு பவுண்டரி அதி பர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறுகையில், கோவையில் 400 க்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிலில் 80 முதல் 90 சதவீதம் வரை வட மாநில தொழிலாளர்களே பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில், பவுண்டரி தொழில் முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வட மாநில தொழிலாளர்களை பயிற்சிய ளித்து திறன் மிகு தொழிலாளர்களாக மாற்றியிருக்கிறோம். அவர்கள் இடத்தை உடனடியாக நிரப்ப முடியாது. ஊடரங்கு நீட்டிப்பால் வெளி மாவட்ட தொழிலாளர்க ளும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்றார்.
இதேபோல் வட மாநில தொழிலா ளர்கள் இடம்பெயர்வு சிறு, குறு தொழில்க ளுக்கு சாவலாக இருக்கிறது. இதனால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என சிறு, குறு தொழில் துறையினர் தெரி விக்கின்றனர். கொரோனா பிரச்சனை களில் இருந்து தொழில் துறை மீண்டு வர இந்தாண்டு இறுதி வரையாகும் என்றா லும், சிறு, குறு தொழில் துறைக்கு வட மாநில தொழிலாளர்களின் பங்களிப்பு தேவை. சிறு, குறுந்தொழில் துறையினர், அதுவரை ஊரக பகுதிகளில் உள்ள இளை ஞர்களுக்கு தொழில் பயிற்சியளிப்பது இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமை யும் என்கிறார் கோவை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி.
இதுகுறித்து, சிஐடியு கோவை மாவட்ட புலம்பெயர்ந்தோர் சங்கத்தின் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இங்கே வரும் புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் தங்களின் வயிற்றை வளர்ப்ப தற்காக வரவில்லை. தங்களின் குடும்பத் தின் வறுமையை போக்க வேண்டும் என்ப தற்காகவே இங்கு வந்து பணிபுரிகின்றனர். ஆனால் நெருக்கடியான காலத்தில் அரசும் கைகொடுக்கவில்லை. நிறுவனங் களும் உதவவில்லை. ஊதியம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்தது என்றாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளுக்கு அவை மேலும் சொல்லென்னா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்கார ணமாகத்தான் வட மாநில தொழிலாளர் கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்கின்ற னர். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போக வில்லை. ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிற தொழிலா ளர்களை கௌரமாக அரசும், தனியார் நிறுவனங்களும் போதிய ஏற்பாடுகளை செய்து அனுப்பிவைத்தால் அவர்கள் திரும்ப வருவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் இங்கே இத்தொழிலாளர்கள் துன்பப்படும்போது மத்திய,மாநில அரசு கள் கைகொடுக்காமல் கைவிட்டுவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே தான் சாலையில் நடந்து செல்கிற இத்தொழிலாளர்கள் மோடி சர்க்கார் முர்தா பாத் என்றும் தரித்திரம் பிடித்த ஆட்சி ஒழியட்டும் என முழக்கமிட்டு செல்கிற காட்சிகளை பார்க்க முடிகிறது என்றார்.
உள்ளூர் தொழிலாளிக்கு அதிக ஊதி யம் தரவேண்டும், புலம்பெயர் தொழிலா ளிக்கு குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும் என்கிற முதலாளிகளின் உழைப்பு சுரண்டலால் தற்போதைய பேரிடரில் இடம் பெயர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களால் பெரும்பான்மையான தொழில்கள் நெருக்க டிக்கு உள்ளாகியுள்ளது. இது முதலாளிக ளின் சுயநலத்தால் வந்தது என்றாலும், எந்த ஊர் தொழிலாளி என்றாலும் உழைப்பிற் கேற்ற ஊதியம் தரவேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டால்தான் எதிர்காலத்தில் தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீளமுடியும்.
- அ.ர.பாபு