tamilnadu

img

90 நாளில் முன்பணம் திரும்ப கொடுக்கப்படும்

மண்டப உரிமையாளர்கள் அறிவிப்பு

அவிநாசி, மே 20 - அவிநாசியில் திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு திருமணத் தேதியிலிருந்து 90 நாள்களுக்குள் முன்ப ணம் திருப்பி கொடுக்கப்படும் என மண்டப உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அவிநாசி வட்டார திருமண மண்டப உரி மையாளர்கள் கூட்டம் ஸ்ரீ செந்தூர் மஹா லில் செவ்வாயன்று சங்கத் தலைவர் வி. பொண்ணுக்குட்டி, செயலாளர் எஸ். கோவிந்தராஜ்,  பொருளாளர் எம்.ஆர்.பி (எ)  பிரபு ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, திருமண மண்ட பங்களில் பங்குனி, சித்திரை,  வைகாசி மற்றும் ஆனி ஆகிய மாதங்களில் திரும ணங்கள் நடத்த முன் பதிவு செய்து, கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் கள் மற்றும் சொந்த இடங்களில் திரும ணம் நடத்தியவர்களுக்கு மட்டும் மண்டபத் தில் செலுத்திய முன்பணம் திரும்ப கொடுக்கப்படும். குறிப்பாக திருமணம் நடைபெற இருந்த தேதியிலிருந்து 90  நாள்களுக்குள் பணம் திரும்ப கொடுக் கப்படும். அதிலும் மண்டபதாரர்கள் 3  மாதத்திற்குள் பணம் கொடுக்காத பட்சத்தில்  சம்மந்தப்பட்டவர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டால் சங்கத்தின் மூலம் பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.