ஏற்காடு, செப்.25- ஏற்காட்டில், காந்தியின் 150ஆவது பிறந்த தினத் யொட்டி பள்ளி மாணவர்கள் தூய்மை பணி மற்றும் பேரணி மேற்கொண்டனர். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை யொட்டி சேலம் ஹேலிகிராஸ் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பேரணி சென்றனர். ஏற் காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், மாணவர்களின் பேரணியை ஒண்டிக்கடை புறக்காவல் நிலையத்தி லிருந்து துவக்கி வைத்தார். இப்பேரணி அண்ணா சிலை, அண்ணா பூங்கா, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளை வழியாக காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.பின்னர் மாணவர்கள், ஏற்காடு டவுன், கடை வீதி பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடு பட்டனர்.