தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாது காப்பு நல சங்கத்தின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஈரோட்டில் மனித வளையம் என்ற நிகழ்வு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.எம்.பாலு தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் மாரிமுத்து, செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் சிறப் புரையாற்றினர். மேலும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.