கோவை, ஜூன் 1- கோவையில் தற்காலிமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மாந கராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித் துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரும் மற்றும் தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளதா வது: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி, கனி கடைகள் டாக்டர். நஞ்சப்பா சாலையிலுள்ள சிறைச் சாலை மைதானத்தில் செயல்பட உள்ளது. இதேபோல் உக் கடம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் உக்கடம் லாரிப்பேட்டையில் செயல்பட உள் ளது. மேலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி, கனி கடைகள் வழக்கம்போல் உழவர் சந்தைக்கு மாற்றம் செய் யப்பட்டு செயல்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.